நண்பனை தலையில் குத்தி கொடூரமாக கொன்ற வாலிபர்.! விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் உண்மைகள்.! பகீர் சம்பவம்.!

நண்பனை தலையில் குத்தி கொடூரமாக கொன்ற வாலிபர்.! விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் உண்மைகள்.! பகீர் சம்பவம்.!



young-man-killed-his-friend-in-mayiladuthurai

மயிலாடுதுறை அருகேயுள்ள மூவலூர் வடக்கு தெருவில் வசித்து வந்தவர் ராஜலிங்கம். இவருடைய மகன் ராஜ்குமார். இவர் கட்டிட தொழில் செய்து வந்துள்ளார். இந்நிலையில் பணிக்கு சென்ற அவர் வெகுநேரமாகியும் வீடு திரும்பாததால் அவரை குடும்பத்தினர் அனைவரும் பல இடங்களிலும் தேடியுள்ளனர். ஆனால் அவரை பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை. 

இந்நிலையில் நேற்று அவர் மயிலாடுதுறை அருகே மங்கைநல்லூர் பகுதி மஞ்சளாறு ரயில்வே தண்டவாளத்தில் தலையில் பாட்டில் மற்றும் கருங்கல்லால் குத்தி கொலை செய்யப்பட்ட நிலையில் பிணமாக கிடந்துள்ளார். அதனை கண்ட அப்பகுதி மக்கள் இதுகுறித்து போலீசாருக்கு தகவலளித்த நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்த அவர்கள் ராஜ்குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். பின் இந்த கொலை குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

தொடர்ந்து அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்ததை தொடர்ந்து கபிலன் மற்றும் 17 வயது சிறுவன் ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். பின் அவா்களிடம் நடத்திய விசாரணையில் மின்கம்பிகளை திருடியதாக கபிலன் மற்றும் சிறுவன் மீது ராஜ்குமார் பழி போட்டதாகவும், ஆத்திரத்தில் இருவரும் ராஜ்குமாருக்கு மது வாங்கி கொடுத்து அடித்துக் கொன்றதாகவும் கூறியுள்ளனர்.

Murder

ஆனால் ரயில்வே தனிப்படை போலீசார் கொலையாளிகளை விசாரித்த போது, அவர்கள் ராஜ்குமாருக்கு அளவுக்கு அதிகமாக மதுவை ஊற்றி கொடுத்து, ஓரினச்சேர்க்கைக்கு அழைத்துள்ளனர். அதற்கு மறுத்துவிட்டு ராஜ்குமார் தப்பி ஓடவே ஆத்திரமடைந்த இருவரும் பீர் பாட்டிலால் அவரது தலையில் தாக்கியுள்ளனர். பின்னர் கீழே விழுந்தவரை கற்களால் தாக்கி கொடூரமாக கொலை செய்துள்ளனர். அதுமட்டுமின்றி ராஜ்குமாரின் உடலை தண்டவாளத்தில் தூக்கிபோட்டு தற்கொலையாக மாற்றவும் முயற்சித்துள்ளனர். ஆனால் மெலிதான  உடல் என்பதால்  ரயில்களில் அடிபட்டு சிதையாமல் அப்படியே கிடந்துள்ளது தெரியவந்துள்ளது.