கண்கலங்க வைக்கும் சம்பவம்.. ஆசையாக மணவாழ்க்கையை தொடங்கிய பெண் 1 மாதத்தில் சடலமாக வந்த சோகம்.. கதறும் பெற்றோர்..



Young girl dead after a month of marriage near Pondicherry

இளம் பெண் ஒருவர் திருமணம் முடிந்த ஒரே மாதத்தில் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

புதுச்சேரி புதுசாரம் லட்சுமி நகரை சேர்ந்தவர் ஏழுமலை. கேஸ் டிஸ்ட்ரிபுட்டரான இவருக்கும், விழுப்புரம் மாவட்டம் தனசிங்குபாளையத்தை சேர்ந்த சிவபாக்கியம் என்ற இளம் பெண்ணிற்கும் பெற்றோர் திருமண நிச்சயம் செய்து, இவர்களின் திருமணம் கடந்த பிப்ரவரி மாதம் 1 ஆம் தேதி சீரும் சிறப்புமாக நடந்து முடிந்துள்ளது.

இந்நிலையில் குடிபோதைக்கு அடிமையான ஏழுமலை திருமணம் முடிந்த நாளில் இருந்தே தனது மனைவியிடம் வரதட்சணை கேட்டு கொடுமை படுத்தியதாக கூறப்படுகிறது. இந்த தகவலை அறிந்த சிவபாக்யத்தின் பெற்றோர் மகளுக்கு தாலி பிரித்து கோர்க்கும் சடங்கின்போது கூடுதல் நகை மற்றும் வீட்டு பாத்திரம் ஆகியவற்றை தருவதாக உறுதி அழைத்துள்ளனர்.

ஆனாலும் சிவபாக்யத்தை கொடுமை படுத்துவதை ஏழுமலை நிறுத்தவில்லை. வழக்கம்போல் மது அருந்திவிட்டு நேற்று முன்தினம் இரவு ஏழுமலை தனது மனைவியிடம் சண்டை போட்டுள்ளார். பின்னர் நாளிரவில் சிவபாக்யத்தின் பெற்றோருக்கு போன் செய்து, உங்கள் மகள் இறந்துவிட்டதாக தகவல் கொடுத்துள்ளார்.

இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த சிவபாக்யத்தின் பெற்றோர், புதுச்சேரிக்கு சென்று தங்கள் மகளின் உடலை பார்த்து கதறி அழுதனர். மேலும் சிவகாதியத்தின் பெற்றோர் மற்றும் அவரது உறவினர்கள் என 20 கும் மேற்பட்டோர் அந்த பகுதி காவல் நிலையத்தை முற்றுகையிட்டு, ஏழுமலைதான் தங்கள் மகளை அடித்து கொலை செய்திருப்பதாகவும், அவர் மீது கொலை வழக்கு பதிவு செய்து, உடனே அவரை கைது செய்யவேண்டும் எனவும் கோரிக்கை வைத்தனர்.

மேலும் காவல் நிலையத்தில் தரையில் அமர்ந்து இறந்துபோன தங்கள் மகளை நினைத்து அவர்கள் அழுதது அங்கிருந்த அனைவரையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியது. மேலும் திருமணம் முடிந்த ஒரே மாதத்தில் மணப்பெண் உயிரிழந்ததால் இந்த வழக்கு குறித்து விசாரிக்க ஆர்டிஓ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.