மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பெண்.! கட்டிலில் இருந்து தவறி விழுந்து மரணம்.!

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பெண்.! கட்டிலில் இருந்து தவறி விழுந்து மரணம்.!



women died fell down from bed

திருவண்ணாமலை மாவட்டம் அண்ணாமலை நகர் பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணி. இவரது மனைவியான 55 வயதாகும் சாந்திக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டது. இதனால் சாந்தி கடந்த 20 ஆம் தேதி சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், கடந்த 21ஆம் தேதி மாலை கட்டிலில் இருந்து தவறி விழுந்தார். இதில் அவருக்கு பலத்த அடிபட்டுள்ளது. அவரது தலை, முகம், வாயில் ரத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து உடனடியாக சாந்தியை சென்னையில் உள்ள ராஜீவ் காந்தி மருத்துவமனைக்கு மேல்சிகிச்சைக்காக கொண்டு சென்றுள்ளனர்.

ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சாந்திக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் பரிதாபமாக உயிரிழந்தார். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.