கொரோனாவால் மரணமடைந்த கணவன் உடலை அடக்கம் செய்த பின், மனைவி எடுத்த விபரீத முடிவு!

கொரோனாவால் மரணமடைந்த கணவன் உடலை அடக்கம் செய்த பின், மனைவி எடுத்த விபரீத முடிவு!



wife suicide for husband death

விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த பிரபாகர் என்பவர் ரயில்வேயில் வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு, ராமபிரபாவதி என்ற பெண்ணுடன் திருமணமாகி, 2 மகள்களும் உள்ளனர்.

பிரபாகரின் மனைவி ராம்பிரபாவதி தனியார் பள்ளி ஒன்றில் ஆசிரியராக பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில், கடந்த 24-ஆம் தேதி பிரபகர்க்கு கொரோனா அறிகுறி இருந்ததால் அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. பரிசோதனை முடிவில் அவருக்கு பாசிட்டிவ் வந்ததால் அவர் உடனடியாக மதுரை அரசு மருத்துவனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

மருத்துவமனையில் பிரபாகர் 3 நாட்கள் தீவிரமான சிகிச்சை பெற்று வந்த நிலையில், திடீரென நேற்று அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு, உயிரிழந்தார். இதையடுத்து அவரது சடலத்தை சொந்த ஊரான விருதுநகருக்கு கொண்டு வந்து, நேற்று மதியம் அடக்கம் செய்யப்பட்டது.

corona

பிரபாகர் கொரோனாவால் மரணமடைந்தால், அவரின் 2 மகள்களுக்கும் பரிசோதனை செய்ய உடனே அரசு மருத்துவமனைக்கு, புறப்பட்டு சென்றனர். தன் அம்மாவையும் தங்களுடன் பரிசோதனை செய்ய வருமாறு அழைத்துள்ளனர். ஆனால், ராமபிரபாவதி மறுத்துவிட்டு, கணவரை நினைத்து அழுது கொண்டே இருந்துள்ளார்.

இதனால் அவரை சமாதானப்படுத்த முடியாமல், மகள்கள் இருவரும் அழுதுகொண்டே மருத்துவமனைக்கு சென்றனர்.. அப்போது வீட்டில் தனியாக இருந்த ராமபிரபாவதி, தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.