வாகன ஓட்டிகளுக்கு பேரதிர்ச்சி.. ஏப்ரல் 1 முதல் கட்டணம் உயர்கிறது.. அதிரடி உத்தரவு.! 

வாகன ஓட்டிகளுக்கு பேரதிர்ச்சி.. ஏப்ரல் 1 முதல் கட்டணம் உயர்கிறது.. அதிரடி உத்தரவு.! 



Vanagaram and Surappattu Toll Plaza Tax Increased

தமிழகத்தில் உள்ள 2 சுங்கச்சாவடிகளின் சுங்கக்கட்டணம் உயர்த்தப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. 

மத்திய அரசின் தேசியநெடுஞ்சாலை ஆணையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "ஏப்ரல் மாதம் 1 ஆம் தேதி முதல் வானகரம் மற்றும் சூரப்பட்டு சுங்கச்சாவடிகளின் கட்டணம் உயர்த்தப்படுகிறது. 

வானகரம், சூரப்பட்டில் உள்ள சுங்கச்சாவடிகளில் ரூ.10 முதல் ரூ.40 வரை கட்டணம் உயர்த்தப்பட இருக்கிறது. வாகன ஓட்டிகள் அதற்கேற்றாற்போல செயல்பட்டுக்கொள்ளவும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Vanagaram

முன்னதாக தமிழக அரசு மேற்கூறிய 2 சுங்கச்சாவடிகளையும் அகற்ற கோரிக்கை விடுத்திருந்த நிலையில், மத்திய அரசு கட்டணம் உயர்த்தி அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.