அளவுக்கு அதிகமாக சத்து மாத்திரை சாப்பிட்டதால் துயரம்: 14 வயது மாணவன் பரிதாப பலி..! பெற்றோர்களே கவனம்..!

திருச்சி மாவட்டத்தில் உள்ள திருவளர்ச்சிபட்டி பகுதியில் வசித்து வருபவர் காமராஜ். இவரது மகன் வில்பர்ட் (வயது 14). சிறுவன் வில்பர்ட் புத்தூரில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு பயின்று வந்துள்ளார்.
கடந்த 1-ஆம் தேதி பள்ளியில் மருத்துவ முகாம் நடைபெற்றதாக தெரிய வருகிறது. அப்போது மாணவர் வில்பட்டுக்கு வாரம் ஒரு மாத்திரை என 25 சத்து மாத்திரைகள் எடுத்துக்கொள்ள வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் மாணவர் நேற்று ஒரே நாளில் மொத்தமாக பத்து மாத்திரைகளை சாப்பிட்டதாக தெரியவருகிறது. இதனால் உடல்நலக்குறைவு ஏற்பட்ட மாணவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.