நடிகர் அரவிந்த் சாமியின் அப்பா யார் தெரியுமா? பலரும் அறியாத உண்மை!
12 நாட்கள் தீவிரமாக தேடல்! தமிழகத்தை உலுக்கிய 10 வயது சிறுமி பலாத்காரம்! வடமாநில வாலிபரின் வெறிச்செயல்! ரயில்வே ஸ்டேஷனில் குற்றவாளி கைது...
திருவள்ளூர் மாவட்டம் ஆரம்பாக்கம் பகுதியில் நடந்த ஒரு பாலியல் வன்கொடுமை சம்பவம் தற்போது தமிழகத்தை முழுவதும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 10 வயது சிறுமி மீது நடந்த இந்த கொடூரச் செயலைத் தொடர்ந்து, போலீசார் கடந்த 12 நாட்களாக விசாரணையை பல்வேறு கோணங்களில் தீவிரமாக நடத்தி வருகின்றனர்.
குற்றவாளியின் சிசிடிவி காட்சிகள் மற்றும் பிற தகவல்களின் அடிப்படையில், தமிழகத்திலும், அண்டை மாநிலங்களிலும், குறிப்பாக ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள் மற்றும் பொதுமுகாம்களில் தீவிர தேடுதல் நடைபெற்றது.
இந்நிலையில், ஆந்திரா மாநிலம் சூலூர்பேட்டை ரயில்வே நிலையத்தில், குற்றச் சம்பவத்தின்போது இருந்த அதே உடையில் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர். அவரிடம் நடந்த முதற்கட்ட விசாரணையில், அவர் மேற்கு வங்காளம் மாநிலத்தைச் சேர்ந்தவர் என்பது தெரியவந்துள்ளது.
இதையும் படிங்க: அதிர்ச்சி! கிணற்றில் மிதந்த அடையாளம் தெரியாத ஆணின் உடல்! உடல் பாகங்கள் சில காணவில்லை! சிவகங்கையில் பரபரப்பு...