பெற்றோரை அவதூறாக திட்டிய 32 வயது இளைஞர் கழுத்தறுத்து கொடூர கொலை; 15 வயது சிறுவன் பதறவைக்கும் செயல்.!

பெற்றோரை அவதூறாக திட்டிய 32 வயது இளைஞர் கழுத்தறுத்து கொடூர கொலை; 15 வயது சிறுவன் பதறவைக்கும் செயல்.!



Tiruppur 15 Age Minor boy Killed 32 Aged Youngster 

 

திருப்பூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம் பகுதியை சேர்ந்த யுவராஜ் (வயது 32) என்பவர், சம்பவத்தன்று தனது வீட்டில் கழுத்தறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டவாறு சடலமாக மீட்கப்பட்டார். 

இந்த விஷயம் தொடர்பாக தகவல் அறிந்த காவல் துறையினர், யுவராஜின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். அவரை கொலை செய்த நபர் தொடர்பாக விசாரணை நடந்தது. 

Tiruppur

இதனிடையே, அப்பகுதியை சேர்ந்த 15 வயது சிறுவன் நீதிமன்றத்தில் சரணடைந்தார். அவரிடம் நடந்த விசாரணையில் யுவராஜ், தனது பெற்றோரை சண்டையில் அவதூறாக பேசியதால் ஆத்திரமடைந்து கொலை செய்ததாக தெரிவித்துள்ளார்.