திருச்சபை நிர்வாகத்தை நடத்துவதில் இருதரப்பு மோதல்; கன்னத்தில் பளார் வைத்து தொடங்கிய அடிதடி.. பகீர் வீடியோ வைரல்.!

திருச்சபை நிர்வாகத்தை நடத்துவதில் இருதரப்பு மோதல்; கன்னத்தில் பளார் வைத்து தொடங்கிய அடிதடி.. பகீர் வீடியோ வைரல்.!



TIrunelveli Church 2 Gang Fight 

திருநெல்வேலி தென்னிந்திய திருச்சபையில் நிர்வாகத்தை நடத்துவதில் இரு தரப்பினர் இடையே தொடர்ந்து மோதல் போக்கானது நிலவி வருகிறது. 

அவ்வப்போது இரு தரப்பும் சண்டையிட்டு கொள்ளும் சம்பவமும் நடந்து வருகிறது. இந்த நிலையில், தென்னிந்திய திருச்சபை அலுவலகத்தில் நேற்று அடிதடி நடந்த காட்சிகள் வெளியாகி இருக்கின்றன. 

அதில், எம்பி தரப்பு ஆதரப்பாளர்களுக்கும், மற்றொரு நபர்களுக்கும் இடையே தகராறு நடந்ததாக கூறப்படுகிறது. இது குறித்த வீடியோ காட்சிகள் வெளியாகிகள் நிலையில், சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.