காலை உணவு செய்ய தாமதமானதால் ஆத்திரம்; 80 வயதில் மனைவி கொலை.. சிறைவாசத்தில் முதியவர்.!

காலை உணவு செய்ய தாமதமானதால் ஆத்திரம்; 80 வயதில் மனைவி கொலை.. சிறைவாசத்தில் முதியவர்.!



Tirunelveli aged Man Killed Wife After Delay preparing break fast 

 

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கூடன்குளம் பகுதியை சார்ந்தவர் எட்வர்டு (வயது 80). இவரின் மனைவி சவுந்தரவல்லி (வயது 70). தம்பதிகளுக்கு ஒரு மகன், நான்கு மகள்கள் என ஐந்து பேர் இருக்கின்றனர்.

இவர்கள் அனைவருக்கும் திருமணமாகி தங்களது குடும்பத்தாருடன் வசித்து வருகிறார்கள். இந்நிலையில் நேற்று முன்தினம் காலை உணவு தயார் செய்ய தாமதமானதாக கூறப்படுகிறது.

இதனால் வயதான தம்பதியிடையே வாய் தகராறு ஏற்பட்ட நிலையில், ஆத்திரமடைந்த எட்வர்டு உறங்கிக்கொண்டிருந்த தனது மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார்.

இதையடுத்து காவல்துறையினர் தன்னை கைது செய்து விடுவார்கள் என்ற அச்சத்தில் வீட்ட அருகில் இருக்கும் மரத்தில் தூக்கிட்டு அவர் தற்கொலை செய்து கொண்டார். இந்த விஷயம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.