இன்ஸ்டா காதலனை நம்பி கணவருடன் சண்டை; காமப்பிசாசிடம் சிக்கிய மனைவி.. முகத்திரையை கிழித்த பாசக்கார கணவன்.!

இன்ஸ்டா காதலனை நம்பி கணவருடன் சண்டை; காமப்பிசாசிடம் சிக்கிய மனைவி.. முகத்திரையை கிழித்த பாசக்கார கணவன்.!



THoothukudi man Confirm Instagram Man Cheating Women 


தூத்துக்குடியில் சுயதொழில் செய்து வரும் நபருக்கும் - பாளையங்கோட்டையை சேர்ந்த 28 வயது பெண்ணுக்கும், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்று முடிந்தது. 

கடந்த 2022 ஆம் ஆண்டு பிரசவத்திற்காக தனது தாயாரின் வீட்டிற்கு சென்ற பெண்மணி, ஆறு மாதங்கள் கழித்து கணவரின் வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது, எந்நேரமும் செல்போனில் பேசுவது, இன்ஸ்டாகிராமில் சேட்டிங் செய்வது என இருந்துள்ளார். 

இதனை கணவர் கேட்டபோது, இருவருக்கும் இடையே வாக்குவாதம் அதிகரித்து இருக்கிறது. ஒரு கட்டத்தில் கணவர் மனைவியின் செல்போனை சோதனை செய்தபோது, இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இளைஞர் ஒருவரோடு தொடர்பில் இருப்பதும் உறுதியாகியுள்ளது. 

மனைவியிடம் அவரின் செல்போனை காண்பித்து, பழக்கம் தொடர்பாக கேட்ட நிலையில், அவர் தனது தாயார் வீட்டுக்கு கோபித்துக் கொண்டு சென்றுள்ளார். மேலும், விவாகரத்து கேட்டும் நீதிமன்றத்தில் விண்ணப்பித்திருக்கிறார். 

இதனால் மனைவியை பிரிய காரணமாக இருந்த இளைஞரின் உண்மைத்தண்மையை அறிய, பாதிக்கப்பட்டவர் போலி இன்ஸ்டாகிராம் கணக்கு வைத்து சர்ச்சை இளைஞருடன் பேசி இருக்கிறார். 

இந்நிலையில், ஒருகட்டத்திற்கு மேல் தன்னிடம் பேசுவது யார் என்று தெரியாமல், தன்னிடம் உள்ள ஆபாச புகைப்படத்தை அனுப்பி, இதுபோல புகைப்படம் எடுத்து அனுப்ப வேண்டும் என கூறியுள்ளார். 

அப்போது, சம்பந்தப்பட்ட கணவரின் மனைவியுடைய ஆபாச படமும் இருந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்தவர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கவே, விசாரணை நடத்திய காவல்துறையினர் சுந்தர் என்பவரை கைது செய்தனர். 

இவர் பெண்களிடம் பழகி புகைப்படத்தை பெற்று மாபிங் செய்து மிரட்டி பணம் பறிப்பது போன்ற செயலில் ஈடுபட்டதும் அம்பலமானது. விசாரணைக்கு பின் சுந்தர் கைது செய்யப்பட்டார்.