இறப்பிலும் பிரியாத பாசம்... அண்ணன், தங்கைக்கு நிகழ்ந்த துயர சம்பவம்.!

இறப்பிலும் பிரியாத பாசம்... அண்ணன், தங்கைக்கு நிகழ்ந்த துயர சம்பவம்.!



thiruvarur-brother-sister-killed-in-road-accident.

திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அருகே ஒளிமதி கிராமத்தைச் சேர்ந்தவர் ஆனந்தராஜ். இவரது தங்கை அபிநயா. இவர்கள் இருவரும் ஒருவர் மீது ஒருவர் அதிக பாசபிடிப்புடன் இருந்து வந்துள்ளனர். 

இந்நிலையில் இருவரும் சேர்ந்து மன்னார்குடி அருகே தென்பாதி கிராமத்தில் சடங்கு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக சந்தோஷமாக கிளம்பி இருசக்கர வாகனத்தில் புறப்பட்டு சென்றுள்ளனர். 

அப்போது மன்னார்குடி அடுத்துள்ள வடபாதி சொக்கப்பெருமாள் கோவில் அருகே சென்று கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக எதிரே வந்த லாரி ஆனந்தராஜ் சென்ற இருசக்கர வாகனத்தில் மோதியுள்ளது. 

மோதிய வேகத்தில் ஆனந்தராஜ் மற்றும் அபிநயா தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்கள். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தலையாமங்கலம் போலீசார் விபத்தில் உயிரிழந்த இருவரையும் மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக மன்னார்குடி அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்துக்கான காரணம் குறித்து வழக்கு பதிவுசெய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.