புதுக்கோட்டையில் பல இளம்பெண்களை மதுபோதைக்கு அடிமையாக்கி உல்லாசத்துக்கு அனுப்பி வைத்த கொடூரன்.!



the-person-who-made-poor-women-addicted-to-alcohol

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி பகுதியை சேர்ந்த ராஜா என்பவர் திருமணம் உள்ளிட்ட சுபநிகழ்ச்சிகளில்  வரவேற்புப் பணியில் ஈடுபடுவதற்காக இளம்பெண்களை அழைத்து செல்லும் தொழில் செய்து வந்துள்ளார். இதற்காக அவர் குடும்ப வறுமையில் இருக்கும் ஏழ்மை நிலையில் உள்ள இளம்பெண்களை மட்டும் குறிவைத்து வேலைக்கு அழைத்துச் சென்றிருக்கிறார்.

அவரிடம் வேலைக்கு வரும் பெண்களிடம் ஆசை வார்த்தைகள் கூறி அவர்களை மதுவுக்கு அடிமையாக்கி அவர்களிடம் பாலியல் வன்புணர்வில் ஈடுபட்டிருக்கிறார். அதை வீடியோவாக பதிவு செய்து வைத்துக்கொண்டு, அந்த பெண்களை மிரட்டி பல விஐபிகளுக்கு விருந்து வைத்திருக்கிறார் .

இந்தநிலையில், சில தினங்களுக்கு முன்பு தஞ்சாவூரை சேர்ந்த பெண் ஒருவர் சென்னை டிஜிபி அலுவலகம், முதல்வர் தனிபிரிவு மற்றும் மனித உரிமைகள் ஆணையம் ஆகியவற்றிற்கு புகார் மனு அளித்துள்ளார். 

இதுதொடர்பாக பாதிக்கப்பட்ட பெண்களிடம் விசாரணை மேற்கொண்டதில், பல பெண்களை தொலைபேசியிலும், நேரிலும் பாலியல் தொழிலுக்கு அழைத்தது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து ராஜா மீது சாக்கோட்டை காவல் நிலையத்தில் வழக்கு பதியப்பட்டு கைது செய்யப்பட்டார். ராஜாவிற்கு உடந்தையாக இருந்த சாக்கோட்டை காவல் நிலைய தலைமைக் காவலர் மீது துறைரீதியான விசாரணை நடத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.