என்னோட ஹீரோ.. அந்த பிரபல நடிகருடன் காதலை உறுதி செய்தாரா பிக்பாஸ் அர்ச்சனா.!
மைதானத்தில் மயங்கி விழுந்த கபடி வீரர்.. சகவீரர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி.!
மைதானத்தில் மயங்கி விழுந்த கபடி வீரர்.. சகவீரர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி.!
புதுக்கோட்டை மாவட்டம் மேட்டுப்பட்டி பகுதியில் தங்கராஜ் - தமிழரசி தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இவர்களுக்கு யோகேஸ்வரன், சிவா என்று இரண்டு மகன்கள் உள்ளனர்.
இந்நிலையில் கபடி வீரரான யோகேஸ்வரன் புதுக்கோட்டை கலைக் கல்லூரியில் பி.ஏ. மூன்றாம் ஆண்டு படித்து வந்துள்ளார். இவர் பல்வேறு இடங்களுக்கு சென்று கபடி போட்டிகளில் கலந்து கொண்டு விளையாடுவதை வழக்கமாக கொண்டிருந்துள்ளார். இந்நிலையில் அன்னவாசல் அருகிலுள்ள மாங்குடியில் நடைபெற்ற கபடி போட்டியில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து கபடி வீரர்கள் போட்டியில் கலந்து கொண்டுள்ளனர்.
இந்த கபடி போட்டியில் யோகேஸ்வரனும் கலந்து கொண்டதாக சொல்லப்படுகிறது. அப்போது மைதானத்தில் கபடி போட்டியில் விளையாடி கொண்டிருந்த யோகேஸ்வரன் திடீரென மயங்கி விழுந்துள்ளார். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த சக போட்டியாளர்கள் உடனடியாக அவரை மீட்டு அன்னவாசல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் அங்கு யோகேஸ்வரனை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் கபடி வீரர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.