தாவணி பாவாடையில் ஜொலிக்கும் ஜெயம் நாயகி.! இப்பவும் எப்படி இருக்காங்க பார்த்தீங்களா!!
காதலித்து ஏமாற்றிய காதலி.. விரக்தியில் வீடியோ வெளியிட்டு காதலன் எடுத்த விபரீத முடிவு..!
காதலித்து ஏமாற்றிய காதலி.. விரக்தியில் வீடியோ வெளியிட்டு காதலன் எடுத்த விபரீத முடிவு..!
கன்னியாகுமரி மாவட்டம் குதிரைப்பந்துவிளை பகுதியில் தனது பெற்றோர்களை இழந்து வசித்து வருபவர் சதீஷ்குமார். இவர் டைல்ஸ் ஒட்டும் வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் சதீஷ்குமார் கடந்த 5 ஆண்டுகளாக காரங்காடு பகுதியை சேர்ந்த பெண் ஒருவரை காதலித்து வந்துள்ளார்.
இதனையடுத்து இவர்களது காதல் விவகாரம் பெண்ணின் வீட்டிற்கு தெரிய வரவே அவர்களும் இதற்கு சம்மதம் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் சதீஷ்குமார் டைல்ஸ் ஓட்டும் வேலையை விட்டுவிட்டு சவுதி அரேபியாவிற்கு வேலைக்கு செல்ல முடிவு செய்துள்ளார். இதனால் தனது சொத்து பத்திரங்கள் மற்றும் நகைகள் அனைத்தையும் காதலியிடம் கொடுத்துவிட்டு சதீஷ்குமார் வெளிநாடு சென்றுள்ளார். பின்னர் அங்கிருந்து காதலிக்கு தொடர்ந்து பணம் அனுப்பி வந்த நிலையில் சொந்த ஊரில் தனி வீடும் கட்டியுள்ளார்.
இதற்கிடையில் சதீஷ்குமாரை தொடர்பு கொண்ட காதலி தனக்கு வேறு ஒருவரை திருமணம் செய்து வைக்க வீட்டில் முயற்சி செய்வதால் உடனே திரும்பி வருமாறு கூறியுள்ளார். இதனையடுத்து ஊர் திரும்பிய சதீஷ்குமார் காதலியின் வீட்டிற்கு சென்றுள்ளார். ஆனால் காதலியின் பெற்றோர் இனிமேல் எங்கள் வீட்டிற்கு வர வேண்டாம் என்றும் தங்களது மகளுக்கு வேறு ஒரு இடத்தில் வரன் பார்த்து இருப்பதாகவும் கூறியுள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த சதீஷ்குமார் அவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
பின்னர் தான் கொடுத்த சொத்து பத்திரம், நகை மற்றும் பணத்தை திரும்ப கொடுக்கும்படி சதீஷ்குமார் கேட்டுள்ளார். ஆனால் காதலியின் பெற்றொர் அதனை தர முடியாது என்று கூறி அவரை அடித்து துரத்தியுள்ளனர். இதனால் அதிர்ந்து போன சதீஷ்குமார் உடனடியாக இரணியல் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். ஆனால் போலீசார் எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால் விரக்தி அடைந்த சதீஷ்குமார் விஷம் அருந்தி வீட்டில் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சதீஷ்குமாரை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்நிலையில் அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த சதீஷ்குமார் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து சதீஷ்குமாரின் இறப்பிற்கு அவரது காதலி மற்றும் பெற்றோர்தான் காரணம் என்று இரணியல் காவல் நிலையத்தில் சதீஷ்குமாரின் அக்கா புகார் அளித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் சதீஷ்குமார் அவரது செல்போனில் தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு பேசிய வீடியோ ஒன்று சிக்கியது. அதில் தன் இறப்பிற்கு காரணம் காதலி மற்றும் அவரது பெற்றோர் என்று அவர் கூறியுள்ளார். இதனையடுத்து சதீஷ்குமாரின் காதலி மற்றும் அவரது பெற்றோரை கைது செய்த போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.