அமலுக்கு வரும் "தாய்மாமன் தங்க மோதிர திட்டம் "... அரசு மருத்துவமனையில் குழந்தை பிறந்தால் 1 கிராம் மோதிரம்! யாருக்கெல்லாம் கிடைக்கும்.? முழு விவரம் உள்ளே.!!!
தமிழக வெற்றி கழக அரசின் தேர்தல் வாக்குறுதிகளில் அதிக கவனம் பெற்ற திட்டங்களில் ஒன்றான தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் விரைவில் நடைமுறைக்கு வர உள்ளது. அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்கும் இந்தத் திட்டம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியிருப்பது பொதுமக்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளது.
தேர்தலின்போது பெண்களுக்கு அரசு பேருந்துகளில் இலவச பயணம், மாதந்தோறும் ரூ.2,500 மகளிர் உரிமைத் தொகை, ஆண்டுக்கு ஆறு இலவச சிலிண்டர்கள் உள்ளிட்ட பல்வேறு மக்கள் நல வாக்குறுதிகளை தமிழக வெற்றி கழகம் அறிவித்திருந்தது. ஆட்சிப் பொறுப்பை ஏற்ற பிறகு, இந்தத் திட்டங்கள் எப்போது செயல்படுத்தப்படும் என்ற எதிர்பார்ப்பு மாநிலம் முழுவதும் நிலவி வந்தது.
இதையும் படிங்க: மக்களே... கவலையை விடுங்க! வங்கி கணக்கில் வருகிறது மகளிர் உரிமைத்தொகை ரூ.2500.... முதல்வர் விஜய் போட்ட அதிரடி உத்தரவு.!!!
கவனம் ஈர்த்த தாய்மாமன் திட்டம்
அந்த வாக்குறுதிகளில் மக்களின் கவனத்தை அதிகம் ஈர்த்த திட்டமாக தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் பார்க்கப்படுகிறது. ஏழை மற்றும் நடுத்தர குடும்பங்களுக்கு உதவும் நோக்கில், அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் அரசின் சார்பில் ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
குழந்தை பிறப்பை கொண்டாடுவதோடு, அரசு மருத்துவமனைகளில் பிரசவத்தை ஊக்குவிப்பதற்கும் இந்தத் திட்டம் உதவும் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
செப்டம்பர் 15-ல் தொடக்கம்
அதிகாரப்பூர்வ தகவலின்படி, இந்த தங்க மோதிரம் திட்டம் வரும் செப்டம்பர் 15-ஆம் தேதி பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளை முன்னிட்டு தொடங்கி வைக்கப்பட உள்ளது. இதற்கான நிர்வாக ஏற்பாடுகள் மற்றும் பயனாளர்கள் தொடர்பான வழிகாட்டுதல்கள் இறுதி கட்டத்தில் உள்ளதாக கூறப்படுகிறது.
யாருக்கு கிடைக்கும்?
அரசு மருத்துவமனைகளில் பிரசவிக்கும் தாய்மார்கள் மற்றும் அங்கு பிறக்கும் குழந்தைகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இதையடுத்து, தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்ட முக்கிய வாக்குறுதிகளில் ஒன்றை அரசு நிறைவேற்றும் நிலை உருவாகியுள்ளது.
மக்கள் நீண்ட நாட்களாக எதிர்பார்த்திருந்த இந்தத் திட்டம் நடைமுறைக்கு வர உள்ளதால், பல்வேறு தரப்பினரும் வரவேற்பு தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக அரசு மருத்துவமனைகளை பயன்படுத்தும் குடும்பங்களுக்கு இது நேரடி பலன் அளிக்கும் திட்டமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: மகளிர் உரிமைத்தொகை 2,500 எப்போது? CM விஜய் பிறந்தநாளில் எதிர்பார்த்த மக்கள்... வெளியான முக்கிய தகவல்..!!!