பெரும் அதிர்ச்சி! படம் பார்த்து கொண்டிருக்கும் போது தியேட்டரில் உயிரைவிட்ட ரசிகர்!
BREAKING: காலவரையற்ற போராட்டம் அறிவிப்பு.... தமிழக அரசுக்கு கூடுதல் நெருக்கடி..!!
தமிழகத்தில் அரசுப் பணியாளர்களின் தொடர் போராட்டங்கள் அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், தற்போது சத்துணவு ஊழியர்கள் போராட்டக் களத்தில் குதித்துள்ளனர். நீண்ட காலமாக நிலுவையில் உள்ள கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, அவர்கள் அடுத்தகட்ட போராட்டத்தை தீவிரப்படுத்தியுள்ளனர்.
நீண்டகால கோரிக்கைகள்
தூய்மைப் பணியாளர்கள், ஆசிரியர்கள், ஊராட்சி செயலாளர்கள் ஆகியோரின் போராட்டங்களைத் தொடர்ந்து, சத்துணவு ஊழியர்களும் தங்களது உரிமைக்காக குரல் எழுப்பியுள்ளனர். சிறப்பு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து, கடந்த ஜனவரி 8-ம் தேதி அடையாளப் போராட்டம் நடத்தப்பட்டது.
காலவரையற்ற வேலைநிறுத்தம்
அரசு தரப்பில் உரிய பதில் கிடைக்காததைத் தொடர்ந்து, பொங்கல் விடுமுறை முடிந்த பிறகு ஜனவரி 20-ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம் நடத்தப் போவதாக சத்துணவு ஊழியர் சங்கம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த முடிவு அரசுத் துறைகளில் புதிய அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: மகிழ்ச்சி செய்தி! சற்று முன்.... ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசாக ரூ.5000..... .? வெளியான புதிய தகவல்.! நிதிதுறைக்கு அரசு உத்தரவு!
அரசுக்கு கூடுதல் நெருக்கடி
ஏற்கனவே பல்வேறு அரசுப் பணியாளர்கள் போராட்டங்களை அறிவித்துள்ள நிலையில், சத்துணவு ஊழியர்களின் இந்த அறிவிப்பும் தமிழக அரசுக்கு கூடுதல் நெருக்கடியை உருவாக்கும் என அரசியல் பார்வையாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
கல்வி நிலையங்களில் மாணவர்களுக்கு உணவு வழங்கும் முக்கியப் பணியைச் செய்து வரும் சத்துணவு திட்டம் சார்ந்த ஊழியர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படுமா என்பது தற்போது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. அரசு விரைவில் தீர்வு காண வேண்டும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இதையும் படிங்க: BREAKING: மகிழ்ச்சி செய்தி! அரசு ஊழியர்களுக்கு... தமிழக அரசு வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!