பால் நிறுத்தும் போராட்டம்.. தமிழ்நாட்டில் தேநீர் விலை உயர்வு, பால் கிடைக்காமல் திண்டாட்டம்.!



Tamilnadu Milk stopping Struggle

பால் கொள்முதல் விலையை லிட்டருக்கு 7 உயர்த்தக்கோரி, தமிழ்நாடு முழுவதும் இன்று பால் உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில் போராட்டம் நடைபெற்று வருகிறது. 

இந்த போராட்டத்தின் எதிரொலியாக சேலம், மதுரை, தேனி, கோவை, ஈரோடு உட்பட பல மாவட்டங்களில் ஆவின் பால் விநியோகம் செய்யப்படவில்லை. இதனால் தேநீர் கடைகளுக்கும் பால் கிடைக்கவில்லை.

tamilnadu news

சில நகரங்களில் வீடுகளுக்கு விநியோகம் செய்யப்படும் பால் கிடைக்காமல் திண்டாட்டமும் ஏற்பட்டுள்ளன. மேற்படியான பல காரணங்களால் இன்று தேனீர் விலை உயர்த்தப்பட்டுள்ளது. தேநீர் விலை உயர்த்தப்பட்டாலும், பால் கிடைக்காததால் பல கடைகளுக்கு இன்று விடுமுறையும் அளிக்கப்பட்டுள்ளன.