வங்கி கணக்கில் மேலும் ரூ.3,000...தேர்தல் தேதி வெளிவதற்கு முன் முதல்வர் ஸ்டாலின் அறிவித்த மகிழ்ச்சி செய்தி!!!
சமூகத்தின் முக்கிய குரலாக செயல்படும் பத்திரிகையாளர்களின் நலனை மேம்படுத்தும் நோக்கில் தமிழக அரசு முக்கிய தீர்மானம் ஒன்றை எடுத்துள்ளது. நீண்ட காலமாக பத்திரிகையாளர் அமைப்புகள் முன்வைத்த கோரிக்கைகளை பரிசீலித்த அரசு, அவர்களின் வாழ்வாதார பாதுகாப்பை வலுப்படுத்தும் வகையில் பத்திரிகையாளர்கள் ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியத்தை உயர்த்தும் அரசாணையை வெளியிட்டுள்ளது.
ஓய்வூதிய தொகையில் உயர்வு
அரசாணையின் படி, இதுவரை மாதம் ₹12,000 வழங்கப்பட்ட பத்திரிகையாளர்களுக்கான ஓய்வூதியம் தற்போது ₹15,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல், பத்திரிகையாளர்கள் மறைவுக்குப் பிறகு அவர்களது குடும்பத்தினருக்கு வழங்கப்படும் குடும்ப ஓய்வூதியம் ₹6,000 இலிருந்து ₹7,500 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த உயர்வு, பத்திரிகையாளர்கள் எதிர்கொள்ளும் பொருளாதார சவால்களை கருத்தில் கொண்டு மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வீட்டு வசதி வழங்கும் திட்டம்
மேலும், பத்திரிகையாளர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் முயற்சியாக தமிழ்நாடு அரசு மற்றொரு முக்கிய அறிவிப்பையும் வெளியிட்டுள்ளது. தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் மூலம் பத்திரிகையாளர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் வீடுகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: மார்னிங் மகிழ்ச்சி செய்தி! மீண்டும் மீண்டும் வங்கி கணக்கில் 1000+ 2,500+ 5000.....முதல்வர் ஸ்டாலினின் சர்ப்ரைஸ் கிப்ட்!!!
பத்திரிகையாளர் சமூகத்தில் வரவேற்பு
தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன்பாக வெளியான இந்த அறிவிப்பு, பத்திரிகையாளர் சமூகத்தில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. பொதுச்சேவைக்காக தங்களின் வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணிக்கும் பத்திரிகையாளர்களின் நலனை கருத்தில் கொண்டு மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கை, அவர்களின் வாழ்க்கையில் நம்பிக்கையை அதிகரிக்கும் ஒரு முக்கிய முடிவாக பார்க்கப்படுகிறது. எதிர்காலத்திலும் பத்திரிகையாளர் நலத்திட்டங்கள் மேலும் வலுப்பெற வேண்டும் என்ற எதிர்பார்ப்பும் இதன் மூலம் உருவாகியுள்ளது.