வீட்டை சுத்தம் செய்த பெண்ணுக்கு எமனாக வந்த பாம்பு! கடைசியில் நிகழ்ந்த சோகம்.

வீட்டை சுத்தம் செய்த பெண்ணுக்கு எமனாக வந்த பாம்பு! கடைசியில் நிகழ்ந்த சோகம்.


Sumithra chennai snake

சென்னை கே. கே நகரை சேர்ந்தவர்கள் பழனி - சுமித்ரா தம்பதியினர். சுமித்ராவின் கணவர் பழனி கார்பெண்டராக வேலை செய்து வந்துள்ளார். கடந்த வாரம் முழுவதும் சென்னையில் விடாமல் மழை பெய்து வந்துள்ளது.

அதனால் பழனி வீடு முழுவதும் தண்ணீரில் முழ்கியுள்ளது. இந்நிலையில் நேற்று வீடு முழுவதும் சகதியாக இருந்ததால் வீட்டை கழுவி சுத்தம் செய்துள்ளார் சுமித்ரா. அப்போது பாத்ரூம் அருகே இருந்த ஷுவை எடுத்துள்ளார்.

I hennai

அப்போது அதில் பதுங்கிருந்த 2 அடி நீளமுள்ள விரியன் பாம்பு ஒன்று சுமித்ராவை கடித்துள்ளது. உடனே அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால் உடல் முழுவதும் விசம் ஏறியதால் சுமித்ராவை காப்பாற்ற முடியவில்லை.