மது போதையில் தாய்க்கு பாலியல் தொல்லை கொடுத்த மகன் மர்மமான முறையில் மரணம்!

மது போதையில் தாய்க்கு பாலியல் தொல்லை கொடுத்த மகன் மர்மமான முறையில் மரணம்!



Son mystery death in Cuddalore

கடலூர் அருகே மது பாதையில் தாய்க்கு பாலியல் தொந்தரவு கொடுத்த மகன் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் மாவட்டம் தூக்கணாம்பாக்கம் அடுத்த பள்ளிப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் மல்லிகா. கணவனை இழந்த இவருக்கு குணசீலன் என்ற மகன் இருந்துள்ளார். இதில் மது போதைக்கு அடிமையான குணசேகரன் வேலைக்கு செல்லாமல் குடித்துவிட்டு ஊர் சுற்றி வந்துள்ளார்.

Cuddalore

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு குடித்துவிட்டு தனது தாய்க்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். இது குறித்த புகாரின் பெயரில் கைதான இவர் சமீபத்தில் ஜாமினில் வெளியே வந்துள்ளார்.

Cuddalore

இந்த நிலையில் குணசீலன் நேற்று மர்மமான முறையில் ரத்த வெள்ளத்தில் வீட்டில் உயிரிழந்து கிடந்துள்ளார். இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் கொலை செய்தது யார் என தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.