பெற்ற தாயை குழிக்குள் தள்ளி தாக்கிய கொடூர மகன்.. வெளியான அதிர்ச்சி வீடியோ!

பெற்ற தாயை குழிக்குள் தள்ளி தாக்கிய கொடூர மகன்.. வெளியான அதிர்ச்சி வீடியோ!



Son attack mother in kanniyakumari

கன்னியாகுமரி அருகே மகன் பெற்ற தாயை குழிக்குள் தள்ளிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் நித்திரவிளை அருகே உள்ள ஆலங்காடு பகுதியை சேர்ந்த 73 வயது மூதாட்டிக்கு 2 மகன்கள் உள்ளனர். இவர்கள் இருவருக்கும் இடையே சொத்து தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதற்கு இதற்கு காரணம் இவர்களது தாய் தான் என கூறப்படுகிறது.

இந்த நிலையில் சம்பவத்தன்று மூத்த மகன் தனது தாயிடம் தகராறு செய்து, குழிக்குள் தள்ளி, தாக்கியதாக கூறப்படுகிறது. இதில், படுகாயமடைந்த மூதாட்டியை நீட்டா அக்கம் பக்கத்தினர் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர்.

இந்த சம்பவத்தை இளைய மருமகள் வீடியோவாக எடுத்துள்ளார். தற்போது இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகிய நிலையில், அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.