பழிக்கு பழி.. ஜாமினில் வெளியே வந்த நபர் வெட்டி படுகொலை.. அதிர்ச்சி தகவல்!

பழிக்கு பழி.. ஜாமினில் வெளியே வந்த நபர் வெட்டி படுகொலை.. அதிர்ச்சி தகவல்!



Salem 34 old man murder

சேலம் அருகே ஜாமினில் வெளியே வந்த நபர் மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டத்தில் உள்ள கோரிமேடு பகுதியில் இருக்கும் வேலைவாய்ப்பு அலுவலகம் அருகே 35 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் ரத்த வெள்ளத்தில் இருந்து கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து விரைந்து வந்த போலீசார் உயிரிழந்த நபரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Salem

இதனையடுத்து உயிரிழந்த நபரின் சட்டை பாக்கட்டில் இருந்த ஆதார் அட்டையை வைத்து சோதனை செய்ததில் அவர் கொல்லப்பட்டியை சேர்ந்த கருணாநிதி என்பது தெரிய வந்தது. இதனிடையே போலீசார் நடத்திய விசாரணையில் கடந்த செப்டம்பர் மாதம் கருணாநிதியின் மகள் ராஜேஸ்வரி காதல் திருமணம் செய்துள்ளார்.

இந்த திருமணத்திற்கு தனது மகனின் மனைவி சாந்தி தான் உறுதுணையாக இருந்தார் என கருதி கருணாநிதி, சாந்தியை கொடூரமாக கொலை செய்தார். இதனையடுத்து சிறையில் அடைக்கப்பட்ட கருணாநிதி கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் ஜாமீனில் வெளியே வந்துள்ளார்.

Salem

இந்த நிலையில் கருணாநிதியை மர்ம நபர்கள் அரிவாளால் வெட்டி கொலை செய்தனர். இதனையடுத்து வழக்கு பதிவு செய்த போலீசார் கொலை செய்த மர்ம நபர்களை தேடி வருகின்றனர். இந்த கொலை பழிக்கு பழியாக நடந்ததா இல்லை வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.