மாமியாரின் மீது விபரீத காதல்; படுக்கைக்கு அழைத்து பாடாய்ப்படுத்தும் இளம் மருமகள்.. கணவரிடம் விவாகரத்து கேட்டு அடம்.!

மாமியாரின் மீது விபரீத காதல்; படுக்கைக்கு அழைத்து பாடாய்ப்படுத்தும் இளம் மருமகள்.. கணவரிடம் விவாகரத்து கேட்டு அடம்.!



Uttar Pradesh Bulandshahar Daugther In Law Loves Mother in Law 

எல்ஜிபிடிக்யூ சமூகம் தொடர்பான விழிப்புணர்வு ஏற்பட்டதில் இருந்து, தன்பாலின ஆர்வலர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. எனினும் வற்புறுத்தலின் பேரில் நடக்கும் காதல்/உறவுகள் கண்டிக்கத்தக்கவை. 

உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள புலந்த்சஹார் பகுதியை சேர்ந்த நபருக்கு, கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்று முடிந்துள்ளது. இவர் தனது கணவர் மற்றும் மாமியார்-மாமனார் ஆகியோருடன் வசித்து வருகிறார். 

இந்நிலையில், தனது மாமியாரின் மீது அலாதி பிரியம் கொண்ட மருமகள், ஒருகட்டத்தில் மாமியாரை காதலிக்க தொடங்கி இருக்கிறார். அதாவது அவர் தன்பாலின என தெரியவருகிறது.

மருமகளின் காதல் ஒருகட்டத்தில் எல்லை மீறி மாமியாரை படுக்கைக்கு அழைத்துள்ளது. மேலும், தனது மாமனார் - மாமியார் தனிமையில் சந்திக்காத வகையிலும் பல சித்து வேலைகளை செய்துள்ளார். கணவரிடம் விவாகரத்து கோரி, மாமியாரை திருமணம் செய்ய முடிவெடுத்துள்ளதாகவும் கூறியுள்ளார்.

இதனால் ஒருகட்டத்தில் வெதும்பிப்போன மாமியார், புலந்த்சஹார் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த வினோதமான வழக்கை ஏற்றுக்கொண்ட அதிகாரிகள், விசாரணை நடத்தி வருகின்றனர்.