கள்ளக்காதல் உல்லாசம்.. ஆடையை கழற்றி "அந்தரங்க" உறுப்பில் கொதிக்கும் தண்ணீர் ஊற்றிய பாசக்கார மனைவி.!

கள்ளக்காதல் உல்லாசம்.. ஆடையை கழற்றி "அந்தரங்க" உறுப்பில் கொதிக்கும் தண்ணீர் ஊற்றிய பாசக்கார மனைவி.!


Ranipet Affair Man Penis Boiled by Wife Through Hot Water

32 வயது வாலிபர் மனைவியின் பேச்சை கேட்காமல் கள்ளகாதலியுடன் உல்லாசமாக இருந்து வந்த நிலையில், பாசக்கார மனைவி கணவனின் அந்தரங்க உறுப்பில் கொதிக்கும் நீரை ஊற்றி அந்தரங்க உறுப்பை வேகவைத்த சம்பவம் நடந்துள்ளது. மர்ம உறுப்பு கள்ளகாதலால் சேதமடைந்த துயரம் குறித்து விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு.

இராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள பாணவரம் கிராமத்தில் வசித்து வரும் 32 வயது வாலிபர், அப்பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவருக்கு திருமணம் முடிந்து மனைவி மற்றும் 2 மகன்கள் உள்ளனர். இந்த சூழலில், வாலிபருக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது. 

இதனால் அவ்வப்போது இருவரும் தனிமையில் சந்தித்து வந்த நிலையில், உல்லாசமாகவும் இருந்து வந்துள்ளனர். இந்த கள்ளகாதல் விவகாரம் வாலிபரின் மனைவிக்கு தெரியவர, கள்ளக்காதலை கைவிடக்கூறி கணவரை வற்புறுத்தி இருக்கிறார். இதனால் கடந்த 1 மாதமாக கணவன் - மனைவியிடையே தொடர் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. 

Ranipet

இந்த நிலையில், நேற்றும் இருவருக்கும் சண்டை ஏற்பட, ஆத்திரத்தின் உச்சக்கட்டத்திற்கு சென்ற பெண்மணி கணவனின் கள்ளக்காதலுக்கு பாடம் புகட்ட நினைத்து, அடுப்பில் வெந்நீரை கொதிக்கவிட்டு உறங்கிய கணவனின் அந்தரங்க உறுப்பில் ஊற்றியுள்ளார். 

இதனால் துடிதுடித்துப்போன வாலிபர் அலறவே, சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் அவரைமீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதி செய்தனர். பின்னர், மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இந்த விஷயம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.