திடீரென போராட்டத்தில் குதித்த மன்னர் கல்லூரி மாணவர்கள்!. மாணவர்கள் வைத்த பல கோரிக்கைகள்!.

திடீரென போராட்டத்தில் குதித்த மன்னர் கல்லூரி மாணவர்கள்!. மாணவர்கள் வைத்த பல கோரிக்கைகள்!.



rajahs college student protest in front of the college

புதுக்கோட்டை மாவட்டம் மாட்சிமை தங்கிய மன்னர் கல்லூரியில் ஏராளமான மாணவர்கள் படித்து வருகின்றனர். தற்பொழுது புதுக்கோட்டை மாவட்டத்தில் தனியார் கல்லூரிகளை விட கல்வித்தரத்தில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது இந்த மன்னர் கல்லூரி.

இந்த நிலையில் நேற்று மன்னர் கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து கல்லூரி நுழைவுவாயில் முன்பு தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அங்கு நடந்த போராட்டத்தில் பல கோரிக்கைகளை முன்வைத்தனர் கல்லூரி மாணவர்கள்.

அங்கு மாணவர்கள் கூறுகையில், இலவசபேருந்து  பயணசீட்டு உடனடியாக வழங்க வேண்டும். வகுப்பறைகளுக்கு போதுமான மின்சார வசதி ஏற்படுத்தித்தர வேண்டும். இருசக்கர வாகனங்கள் நிறுத்தும் இடத்தில் மழைநீர் தேங்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கழிவறை களை சுத்தம் செய்ய வேண்டும் என பல கோரிக்கைகளை முன்வைத்தனர்.

கடந்த 4 ஆண்டுகளாக நாட்டு நலப்பணித்திட்ட முகாமிற்கு மாணவ, மாணவிகளை அழைத்து செல்லவில்லை. எனவே இந்த ஆண்டு மாணவ, மாணவிகளை நாட்டு நலப்பணித்திட்ட முகாமிற்கு அழைத்து செல்ல வேண்டும் என வலியுறுத்தி இந்த தர்ணா போராட்டம் நடைபெற்றது

இதனையடுத்து கல்லூரி நிர்வாகத்தினர் மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் மாணவர்கள் தர்ணா போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.