#RainAlert: வீசப்போகும் சூறாவளிக்காற்று.. கொட்டித்தீர்க்கப்போகும் மழை - எச்சரிக்கை விடுத்த வானிலை ஆய்வு மையம்.!!

#RainAlert: வீசப்போகும் சூறாவளிக்காற்று.. கொட்டித்தீர்க்கப்போகும் மழை - எச்சரிக்கை விடுத்த வானிலை ஆய்வு மையம்.!!



rain-alert-for-5-districts

மேற்குதிசை காற்று வேகமாறுபாடு காரணமாக 5 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேற்குதிசை காற்றின் வேக மாறுபாட்டின் காரணமாக தேனி, வட தமிழகம், தென்காசி, கன்னியாகுமரி, திண்டுக்கல், திருநெல்வேலி மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தொடர்ந்து கோயம்புத்தூர், நீலகிரி, திண்டுக்கல், தென்காசி மற்றும் தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

tamilnadu

சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும், அதிகபட்ச வெப்பநிலை 35-36 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26-27 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும் என்று தெரிவித்துள்ளது.

மேலும் ஆந்திர கடலோர பகுதிகள் மற்றும் கர்நாடக கடலோர பகுதிகள், மத்திய வங்ககடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 45 முதல் 58 கிலோ மீட்டர் வேகத்திலும், இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.