#RainAlert: அடுத்த 3 மணிநேரத்தில் 4 மாவட்டங்களில் கொட்டித்தீர்க்கப்போகும் மழை.!

#RainAlert: அடுத்த 3 மணிநேரத்தில் 4 மாவட்டங்களில் கொட்டித்தீர்க்கப்போகும் மழை.!



Rain alert for 4 districts next 3 hours

 

கிழக்கு திசைக்காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தில் அடுத்த மூன்று மணிநேரத்தில் நான்கு மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதன்படி கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி ஆகிய நான்கு மாவட்டங்களில் அடுத்த மூன்று மணிநேரத்திற்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Rain alert

முன்னதாகவே தமிழ்நாட்டில் இன்று முதல் 7 நாட்களுக்கு மழை எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.