மாணவியை நாற்காலியில் உட்காரவைத்து பாலியல் தொல்லை கொடுத்த பேராசிரியர்!. மாணவி கூறும் திடுக்கிடும் தகவல்கள்!
மாணவியை நாற்காலியில் உட்காரவைத்து பாலியல் தொல்லை கொடுத்த பேராசிரியர்!. மாணவி கூறும் திடுக்கிடும் தகவல்கள்!
மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் எலெக்ட்ரானிக் மீடியா மற்றும் ஊடக ஆராய்ச்சி மையம் செயல்பட்டு வருகிறது. இந்த துறையின் தலைவராக பேராசிரியர் கர்ணமகாராஜன் உள்ளார்.
மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் எலெக்ட்ரானிக் மீடியா மற்றும் ஊடகவியல் துறையில், கேரளா மாநிலத்தைச் சேர்ந்தவரான மாணவி கவிதா(25) மதுரை காமராஜர் பல்கலைக்கழக பதிவாளரிடம் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார்.
அதில், நான் மதுரை காமராஜர் பல்கலைகழகத்தில் பிஎச்டி முழுநேர ஆராய்ச்சி மாணவியாக உள்ளேன். எனக்கு வழிகாட்டியாகவும், மேற்பார்வையாளராகவும் துறைத்தலைவர் கர்ணமகாராஜன் நியமிக்கப்பட்டார்.
நான் என்னுடைய படிப்பில் சேர்வதற்கு சில மாதங்கள் காலதாமதம் ஆனதால், ஆராய்ச்சி படிப்பில் சேர்வதற்கு பேராசிரியர் கர்ணமகாராஜன் என்னிடம் ரூ.2 லட்சம் பணம் பெற்றார். அதன் பின் முறையாக நான் என்னுடைய ஆய்வுப் பணிகளை செய்து வருகிறேன்.
இந்நிலையில் கர்ணமகாராஜன் அவருடைய அறையில் இருக்கை தந்து அமரவைத்தார். இடையில் கிடைக்கும் சந்தர்பங்களை பயன்படுத்தி, தனக்கு சாதகமாக்கிக் கொண்டு, என்னிடம் ஆபாசமாக பேசினார்.
அவர் எனக்கு கொடுத்த டார்ச்சரால் படிப்பை விட்டு சென்றுவிடலாமா என்று கூட யோசித்தேன். கடந்த நவம்பர் மாதம் கேரள பல்கலைகழகத்தில் என் ஆராய்ச்சி படிப்பிற்கான தகவல் சேகரிப்பிற்கு ஒரு மாதம் அனுமதி கேட்டதற்கு மறுத்தார்.
இதனையடுத்து நான் உன்னிடம் தனியாக பேச வேண்டும் ரயில் நிலையத்தில் இறக்கிவிடுகிறேன் என்று நெருங்கினார்.அதிர்ச்சியடைந்த மாணவி உடனடியாக அவரிடம் தெரிவிக்காமல் கடந்த நவம்பர் மாதம் 2-ஆம் தேதி சொந்த ஊருக்கு சென்றுவிட்டார்.
ஒரு மாதம் தகவல் சேகரிப்பு பணி முடிந்து திரும்பியபோது, எனக்கு ஒரு மெமோ கொடுத்து விரட்டி விட்டார். என் எதிர்காலம் கேள்விக்குறியாகி விடும் என்று கெஞ்சிய போது உன் எதிர்காலம் நீ என்னிடம் நடந்து கொள்வதில்தான் இருக்கிறது எனக்கூறி என் கையைப் பிடித்தார்.
நான் அதிர்ச்சி அடைந்தேன். கதறி அழுதேன். அதை தனது மொபைல் போனில் கர்ணமகாராஜன் வீடியோ எடுத்தார். மன அழுத்தத்தினால் விடுதி வாசலில் மயங்கி கீழே விழுந்தேன்.
என்னை பல்கலை. மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். தொடர் பாலியல் தொல்லை தந்து, மனஉளைச்சலை கொடுத்த துறைத்தலைவர் கர்ணமகாராஜன் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.