#Breaking || 108 ஆம்புலன்ஸ் மரத்தில் மோதி 21 வயது கர்ப்பிணி பெண், அவரது தாய் மரணம்.. நெஞ்சை உலுக்கும் சோகம்..!!

#Breaking || 108 ஆம்புலன்ஸ் மரத்தில் மோதி 21 வயது கர்ப்பிணி பெண், அவரது தாய் மரணம்.. நெஞ்சை உலுக்கும் சோகம்..!!



pregnant lady dead by ambulance accident

108 ஆம்புலன்ஸ் மரத்தில் மோதியதில் கர்ப்பிணி பெண் மற்றும் அவரது தாய் உயிரிழந்த சோகம் நிகழ்ந்துள்ளது.

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள செங்குளம் பகுதியில் கர்ப்பிணி பெண்ணுடன் 108 ஆம்புலன்ஸ் சென்று கொண்டிருந்தது. அப்போது கட்டுப்பாட்டை இழந்த ஆம்புலன்ஸ் மரத்தில் மோதியதில், 21 வயதான கர்ப்பிணி பெண் நிவேதா மற்றும் அவரது தாய் விஜயலட்சுமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 

இதனை தொடர்ந்து அருகிலிருந்தவர்கள் பலத்த காயத்துடன் இருந்த ஆம்புலன்ஸ் பணியாளர்கள் இருவரையும் மீட்டு மருத்துவமனையில் உடனடியாக அனுமதி செய்துள்ளனர். 

ambulance

மேலும் காவல்துறையினருக்கும் தகவல் தெரிவிக்கவே, சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் கர்ப்பிணி நிவேதா மற்றும் அவரது தாயின் உடலை கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.