குடும்பத்தை பிரிந்து வெளிநாட்டில் இருந்து வீடியோகாலில் பேசிய கணவன்! மனைவி செய்த செயலால் பதறிப்போன கணவன்.!

குடும்பத்தை பிரிந்து வெளிநாட்டில் இருந்து வீடியோகாலில் பேசிய கணவன்! மனைவி செய்த செயலால் பதறிப்போன கணவன்.!


 Poisoned wife while talking on video call

தமிழகத்தின் கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்தவர் செல்வராஜ்.  36 வயதான இவர் ஓமனில் உள்ள எண்ணெய் நிறுவனத்தில் பொறியாளராக பணியாற்றி வந்துள்ளார். இவருக்கு ஐந்து வருடங்களுக்கு முன்பு நந்தா என்ற பெண்ணுடன் திருமணமாகி இந்த தம்பதிக்கு நான்கு வயதில் ஒரு மகளும், இரண்டரை வயதில் ஒரு மகனும் உள்ளனர். 

கணவர் வெளிநாட்டில் இருப்பதால், தனது பெற்றோர் வீட்டில் நந்தா, தனது குழந்தைகளுடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த இரு தினங்களாக போனில் பேசும் போது கணவன், மனைவிக்கு இடையே ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்தநிலையில் நேற்று முன்தினமும் கணவருடன் நீண்டநேரம் வீடியோ காலில் பேசிக்கொண்டிருந்தபோது இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. 

இதனால் கோபமடைந்த நந்தா வீடியோ அழைப்பில் பேசிக் கொண்டு இருக்கும்போதே, திடீரென விஷத்தை குடித்துவிட்டு கணவனிடம் பாய்..பாய் என சொல்லியவாறு போன் வீடியோகாலை துண்டித்தார். இதனைப்பார்த்து அதிர்ச்சியடைந்த செல்வராஜ் உடனடியாக உறவினர்களை தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தார்.

video call

இதனையடுத்து செல்வராஜின் உறவினர்கள் அங்கு சென்று பார்த்தபோது நந்தாவின் வாயில் நுரை தள்ளிய நிலையில் உயிருக்கு போராடிக் கொண்டு இருந்துள்ளார். இதனையடுத்து அவரை மீட்டு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நந்தா உயிரிழந்தார். இச்சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கொரோனா காரணமாக கடினமான பொருளாதாரம் விழுந்து இருக்கும் இந்த சமயத்தில் மக்கள் பொறுமையை கடைபிடித்து வாழவேண்டியது மிக அவசியமானது. குடும்பத்திற்காக வெளி நாட்டில் வேலை செய்யபவர்கள் மிக மன நெருக்கடியான சூழ்நிலையில் வாழ்கிறார்கள். அனைவரும் ஏதோ ஒரு காரணத்திற்காக பிறந்து உள்ளோம். ஆத்திரம் அழிவை தரும். எனவே எதிர்காலத்தை யோசித்து நிதானமாக வாழ பழகிக்கொள்ளும் சூழ்நிலையில் உள்ளோம்.