இதுக்கு ஒரு முடிவே இல்லையா.? வரலாறு காணாத உச்சத்தை எட்டிய பெட்ரோல் விலை.! அதிர்ச்சியில் பொதுமக்கள்.!

இதுக்கு ஒரு முடிவே இல்லையா.? வரலாறு காணாத உச்சத்தை எட்டிய பெட்ரோல் விலை.! அதிர்ச்சியில் பொதுமக்கள்.!



petrol diesel price increased

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்றவாறு இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்களே நிர்ணயித்துக்கொள்ள மத்திய அரசு அனுமதி அளித்தது. அந்த வகையில், பெட்ரோல், டீசல் விலையை தினந்தோறும் நிர்ணயிக்கும் நடைமுறையை எண்ணெய் நிறுவனங்கள் கடைப்பிடித்து வருகிறது.

கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக கொரோனா பரவல் அச்சுறுத்திவரும் நிலையில், பொதுமக்கள் பல இன்னல்களை சந்தித்து வருகின்றனர். இந்தநிலையில் நாளுக்கு நாள் பெட்ரோல் விலை அதிகரித்து உச்சகட்டமாக உயர்ந்து பொதுமக்களை பெரும் வேதனைக்கு உள்ளாக்கி வருகிறது.

petrol

கடந்த இரண்டு நாட்களாக சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.96.23-க்கும், ஒரு லிட்டர் டீசல் ரூ.90.38-க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில் சென்னையில் இன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு 24 காசுகள் அதிகரித்து 96.47 ரூபாய்க்கும், டீசல் விலை லிட்டருக்கு 28 காசுகள் அதிகரித்து 90.66 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.