சாலையில் தனியாக நடந்துசென்ற பெண்ணிற்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவர்.! தட்டி தூக்கிய போலீஸ்.!

சாலையில் தனியாக நடந்துசென்ற பெண்ணிற்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவர்.! தட்டி தூக்கிய போலீஸ்.!



old mab torture to women in road

தமிழகத்தில் சமீப காலமாக பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருகிறது. இந்தநிலையில், சென்னையில் சாலையில் நடந்து சென்ற பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவரை போலீசார் கைது செய்தனர்.

சென்னை சூளைமேடு பகுதியைச் சேர்ந்த 39 வயது பெண் ஒருவர் சாலையில் தனியாக நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த நபர் ஒருவர், அந்த பெண்ணை திடீரென்று கட்டிப்பிடித்து பாலியல் தொல்லை கொடுத்தார். இதனால் அதிர்ச்சியடைந்த அந்த பெண் அங்கிருந்து தப்பிச்சென்று காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.

அந்த பெண், கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், அப்பெண்ணிற்கு பாலியல் தொல்லை கொடுத்தவர் அம்பத்தூர், கள்ளிக்குப்பம் பகுதியைச் சேர்ந்த ரவி என்ற முதியவர் என்பது தெரியவந்தது. இதனையடுத்து ரவியை போலீசார் கைது செய்தனர்.