அடக்கடவுளே..! எனக்கு உனக்கு என்று போட்டி போட்டுக் கொண்டு சத்து மாத்திரைகளை சாப்பிட்ட மாணவிகள்.. பரிதாபமாக பலியான சம்பவம்..!

அடக்கடவுளே..! எனக்கு உனக்கு என்று போட்டி போட்டுக் கொண்டு சத்து மாத்திரைகளை சாப்பிட்ட மாணவிகள்.. பரிதாபமாக பலியான சம்பவம்..!



Oh god..! The students who ate nutritional pills in a competition called "I am you"

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் செயல்பட்டு வரும் உருது பள்ளியில் 8ம் வகுப்பு படிக்கும் மாணவிகளுக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு பள்ளியில் சத்து மாத்திரைகள் வழங்கப்பட்டது. இவ்வாறு வழங்கப்பட்ட சத்து மாத்திரைகளை ஆசிரியர்கள் மறந்து வகுப்பறையில் வைத்து விட்டு சென்றுள்ளனர்.

இந்த நிலையில் சத்து மாத்திரைகளை கைப்பற்றிய மாணவிகள் 4 பேர் போட்டி போட்டுக் கொண்டு சத்து மாத்திரைகளை உட்கொண்டு உள்ளனர். இதனையடுத்து அவர்களுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. மேலும் இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த பள்ளி நிர்வாகமானது மாணவிகள் நான்கு பேரையும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர்.

Students

இதனையடுத்து மேல் சிகிச்சைக்காக மாணவிகள் 4 பேரும் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி சைபா பாத்திமா என்ற மாணவி உயிரிழந்தார். மேலும் இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்திய மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் கவனக்குறைவாக செயல்பட்ட தலைமையாசிரியர் முகமது அமீன் மற்றும் மாத்திரைகளை மாணவிகளுக்கு வழங்கிய ஆசிரியர்கள் 2 பேரை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.