தனது குழந்தைக்காக மறுமணம் செய்த இளைஞர்! கடைசியில் அந்தப் பெண்ணால் வந்த விபரீதம்.
தனது குழந்தைக்காக மறுமணம் செய்த இளைஞர்! கடைசியில் அந்தப் பெண்ணால் வந்த விபரீதம்.
சென்னை தாம்பரத்தை அடுத்த சேலையூரை சேர்ந்தவர் பார்த்திபன். இவருக்கு திருமணமாகி ராகவி என்ற 6 வயது உள்ள நிலையில் இவரது மனைவி எதிர்பாராத விதமாக இறந்து விடுகிறார்.
இந்நிலையில் தனது குழந்தைக்காக ஏற்கனவே திருமணமான சூர்யகலா என்ற பெண்ணை மறுமணம் செய்து கொண்டார். சூர்யகலாவுக்கு ஏற்கனவே ஒரு ஆண் குழந்தை இருந்துள்ளது. அதனால் திருமணமானது பார்த்திபன் குழந்தை வேண்டாம் என கூறியுள்ளார்.
ஆனால் சில நாள்கள் சென்று சூர்யகலா கர்ப்பமாகி உள்ளார். இதனை அறிந்த பார்த்திபன் நமக்கு ஏற்கனவே இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள். அதனால் இந்த குழந்தை வேண்டாம் என கூறி கருக்கலைப்பு செய்யுமாறு கூறியுள்ளார் சூர்யகலாவின் கணவர்.
இதனால் கோபமான சூர்யகலா, பார்த்திபனின் முதல் மனைவியின் குழந்தை ராகவி தான் தனக்கு இடையூறாக இருப்பதால் அந்த குழந்தையை அடித்து கொன்றுள்ளார். ஆனால் அலுவலகத்தில் வேலை செய்யும் தன் கணவரிடம் குழந்தை காணாமல் போய்விட்டது என கூறியுள்ளார்.
உடனே அலுவலகத்திலிருந்து விரைந்து வந்த பார்த்திபன் போலீசில் புகார் அளித்துள்ளார். போலீசார் வந்து சோதனை செய்ததில் குழந்தை வீட்டின் பின்புறமாக உள்ள புதரில் இறந்து கிடந்துள்ளது.
போலீசார் பார்த்திபனின் மனைவி சூர்யா கலாவிடம் விசாரணை நடத்தியுள்ளனர். முதலில் ஒப்புக்கொள்ளாத சூரியகலா அதன் பிறகு தவற்றை ஒப்புக் கொண்டார். மேலும் போலீசார் சூரியகலா விடம் கொலைக்கான காரணத்தை கேட்டுள்ளனர்.
அதற்கு அவர் தான் குழந்தை பெற்றுக்கொள்ள ராகவி தடையாக இருப்பதால் நான் கொலை செய்துள்ளேன் எனக் கூறியுள்ளார். மேலும் தவற்றை ஒப்புக் கொண்டதால் போலீசார் அவரை கைது செய்தனர். கட்டுப்பாடு வந்துருவேன்