கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த குழந்தையை கொன்று வீசிய தாய்!

கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த குழந்தையை கொன்று வீசிய தாய்!



Mother killed baby for illegal affair in Cuddalore

கடலூர் அருகே உள்ள வடக்கு மூளியூர் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன். இவரது மனைவி பிரியா. இந்த தம்பதியினருக்கு 11 மாதமான கலையரசன் என்ற ஆண் குழந்தை இருந்துள்ளது. இந்த நிலையில் பிரியாவுக்கும், அதே பகுதியை சேர்ந்த ஜெயசூர்யாவுக்கும் கள்ளக்காதல் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு பெரியார் தனது குழந்தையுடன் கள்ளக்காதலன் ஜெயசூர்யாவுடன் மாயமாகியுள்ளார். அவர்கள் கேரள மாநிலம் மலப்புறம் அருகே உள்ள பகுதியில் வாடகை வீட்டில் ஜெயசூர்யா, அவரது தந்தை குமார், தாயார் உஷா மற்றும் பிரியா அவரது குழந்தை என அனைவரும் ஒன்றாக வசித்து வந்துள்ளனர்.

Cuddalore

அதே பகுதியில் பிரியாவின் உறவினரான சிலம்பரசன் என்பவர் குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று தற்செயலாக பிரியாவையும், ஜெயசூர்யாவையும் பார்த்துள்ளார். அப்போது குழந்தை எங்கே என்று கேட்டபோது, பிரியா முன்னுக்குப் பின் முரணாக கூறியுள்ளார்.

இதனால் சந்தேகம் அடைந்த சிலம்பரசன் போலீசில் புகார் அளித்துள்ளார். இதனையடுத்து காவல் நிலையத்திற்கு பிரியாவையும், ஜெயசூர்யாவையும் போலீசார் அழைத்து வந்து தீவிர விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில் கடந்த இரண்டு மாதத்திற்கு முன்பு குழந்தையை கொலை செய்தது தெரிய வந்தது.

Cuddalore

இதனையடுத்து இந்த கொலையை செய்த பிரியா, ஜெயசூர்யா மற்றும் ஜெயசூர்யாவின் தந்தை குமார் மற்றும் தாய் உஷா ஆகியோரை கைது செய்த போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.