அரியலூர்: தம்பதிக்கு கொலை மிரட்டல் விடுத்த நபர்!!

அரியலூர்: தம்பதிக்கு கொலை மிரட்டல் விடுத்த நபர்!!



Man threatening to Couples in Ariyallur District

ரியலூர் மாவட்டத்தில் உள்ள உடையார்பாளையம் அருகே தத்தனூர் கீழவெளி என்னும் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் வசித்து வருபவர் அன்புச்செல்வன் மற்றும் அவரது மனைவி கவிதா. இவர்கள் இருவரும் வீட்டிலேயே சிறிய டீக்கடை ஒன்று அமைத்து நடத்தி வந்துள்ளனர்.

இந்த நிலையில் சம்பவ தினத்தன்று டீக்கடைக்கு வந்த அப்பகுதியை சேர்ந்த பிரேம்ராஜ் என்னும் 32 வயது நபர் தகராறில் ஈடுபட்டதாக தெரிகிறது. இதனை தட்டிக்கேட்ட அன்புச்செல்வன் மற்றும் கவிதா தம்பதியை தகாத வார்த்தைகளால் திட்டிய பிரேம் ராஜ் இருவருக்கும் கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.

இது குறித்து அன்புச்செல்வன் மற்றும் கவிதா உடையார்பாளையம் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளனர். பின், அளிக்கப்பட்ட புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் கொலை மிரட்டல் விடுத்த பிரேம்ஜியை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.