நயன் ரசிகர்களுக்கு டபுள் சர்ப்ரைஸ்.. GQ விருது விழாவில் சிறப்பு.!
ஆசை வார்த்தை..!! இளம் கல்லூரி மாணவியுடன் பலமுறை உல்லாசம்.!! கற்பதையும் கலைத்து கடைசியில் மாணவியை ஏமாற்றிய வாலிபர் கைது..
ஆசை வார்த்தை..!! இளம் கல்லூரி மாணவியுடன் பலமுறை உல்லாசம்.!! கற்பதையும் கலைத்து கடைசியில் மாணவியை ஏமாற்றிய வாலிபர் கைது..
கல்லூரி மாணவியை காதலித்து ஏமாற்றி கர்ப்பமாகிய இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டம் வேப்பம்பட்டு ரெயில் நகர், ஏ.கே.என்.அவென்யூ பகுதியை சேர்ந்தவர் விக்னேஸ்வரன் (27). திருவள்ளூர் அடுத்த திருநின்றவூரில் கண் கண்ணாடி கடை ஒன்றை வைத்து தொழில் செய்துவருகிறார்.
இந்நிலையில் விக்னேஸ்வரனுக்கு, அதே பகுதியை சேர்ந்த 24 வயதாகும் கல்லூரி மாணவி ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டு, அந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியுள்ளது. கடந்த 6 ஆண்டுகளாக விக்னேஸ்வரனும், கல்லூரி மாணவியும் காதலித்துவந்துள்ளனர். இந்நிலையில் மாணவியை திருமணம் செய்துகொள்வதாக கூறி, விக்னேஸ்வரன் அந்த பெண்ணுடன் பலமுறை உல்லாசமாக இருந்துவந்துள்ளார்.
இதனால் அந்த மாணவி கர்பமடைந்தநிலையில், வீட்டிற்கு தெரியாமல் விக்னேஸ்வரன் அந்த பெண்ணிற்கு கர்ப்பத்தடை மாத்திரைகள் வாங்கி கொடுத்து கருவை கலைத்துள்ளார். இருப்பினும் விக்னேஸ்வரன் தன்னை திருமணம் செய்துகொள்வார் என அந்த பெண்ணும் நம்பிக்கையுடன் இருந்துவந்துள்ளார்.
இந்நிலையில் விக்னேஸ்வரன் வேறொரு பெண்ணை திருமணம் செய்துகொள்ள இருப்பதாகவும், அவருக்கு திருமண ஏற்பாடுகள் நடந்துவருவதாகவும் மாணவிக்கு தெரியவர, இதுகுறித்து அவர் விக்னேஸ்வரனிடம் கேட்டுள்ளார். விக்னேஸ்வரன் சரியாக பதில் கூறாததை அடுத்து, பாதிக்கப்பட்ட மாணவி நடந்த சம்பவம் குறித்து நேற்று திருவள்ளூரில் உள்ள அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார்.
அந்த பெண் கொடுத்த புகாரை அடுத்து, வழக்கு பதிவு செய்துள்ள போலீசார், விக்னேஸ்வரன்னை கைது செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.