காதல் திருமணம் செய்த மகள்.. சம்பந்தியை வெட்டிச்சரித்து நடுரோட்டில் கொலை.. மதுரையில் பகீர் செயல்.!

காதல் திருமணம் செய்த மகள்.. சம்பந்தியை வெட்டிச்சரித்து நடுரோட்டில் கொலை.. மதுரையில் பகீர் செயல்.!



Madurai Periyar Bus Stand Near Thideer Nagar Love Marriage Auto Driver Murder

ஆட்டோ ஓட்டுனரின் மகள் மற்றொரு ஆட்டோ ஓட்டுனரின் மகனை காதல் திருமணம் செய்துகொண்ட நிலையில், பெண்ணின் தந்தை காதலனின் தந்தையை படுகொலை செய்த சம்பவம் நடந்துள்ளது.

மதுரை மாவட்டத்தில் உள்ள பெரியார் பேருந்து நிலையம் அருகே உள்ள திடீர் நகர், பாஸ்கரதாஸ் தெருவில் வசித்து வருபவர் ராமச்சந்திரன் (வயது 40). இவர் ஆட்டோ ஓட்டுநராக இருந்து வருகிறார். ராமச்சந்திரனின் மகன் சிவப்ரசாந்த். இவர் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இதே பகுதியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் சடையாண்டி. இவரின் மகள் சினேகா. சினேகா தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். சிவ பிரசாந்தும் - சினேகாவும் ஒரே பகுதியில் வசித்து வந்ததால், அவ்வப்போது சந்தித்து வந்துள்ளனர். இதனால் நட்பு ஏற்பட்டு, நாளடைவில் காதல் மலர்ந்துள்ளது. 

கடந்த 2 வருடமாக காதல் ஜோடி ஒருவரையொருவர் உயிருக்கு உயிராக காதலித்து வந்த நிலையில், இந்த விஷயம் இருதரப்பு பெற்றோருக்கும் தெரியவந்துள்ளது. காதல் ஜோடி வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் வீட்டில் எதிர்ப்பு கிளம்பு, காதல் ஜோடி காதலில் உறுதியாக இருந்துள்ளது. இந்த நிலையில், சினேகா வீட்டில் இருந்து மாயமாக, அவரை குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் தேடியும் கிடைக்கவில்லை. நேற்று மதியம் 12 மணிக்கு தந்தைக்கு தொடர்பு கொண்ட சினேகா, தான் காதல் திருமணம் செய்துகொண்டதை தெரிவித்துள்ளார். 

madurai

இதனால் அதிர்ச்சிக்குள்ளான சடையாண்டி, மகளின் காதல் திருமணத்தை ஏற்றுக்கொள்ள இயலாமல் துடித்துள்ளார். காதல் ஜோடி திடீர் நகர் காவல் நிலையத்தில் தஞ்சம் புகுந்துகொள்ள, இருதரப்பு பெற்றோரையும் அதிகாரிகள் அழைத்து சமாதான பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். காவல் நிலையத்திற்கு சென்ற சடையாண்டி எனது மகள் என்றோ இறந்துவிட்டாள், அவளுக்கும் - எனக்கும் சம்பந்தம் இல்லை என்று கூறி சென்றுள்ளார். ராமச்சந்திரனை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தியபோது, அவர் காதல் ஜோடியின் திருமணத்தை ஏற்றுக்கொள்வதாக கூறி, தொந்தரவு அளிக்கமாட்டேன் என எழுதிக்கொடுத்துள்ளார்.

இதனைத்தொடர்ந்து, அனைவரும் வீட்டிற்கு சென்றுவிட்ட நிலையில், நள்ளிரவு 11:45 மணியளவில் ராமச்சந்திரன் தனது ஆட்டோவை வீட்டில் நிறுத்திவிட்டு பெரியார் பேருந்து நிலையத்திற்கு வந்துள்ளார். அங்கிருந்த சடையாண்டி ராமச்சந்திரனை பார்த்து, நீ எப்படி திருமானதை ஏற்றுக்கொள்வாய்? என வாக்குவாதம் செய்துள்ளார். மேலும், நீயும் - உனது மகனும் சேர்ந்து எனது மகளின் வாழ்க்கையை சீரழித்துவிட்டீர்களே என தகராறில் ஈடுபட, வாக்குவாதம் முற்றியபோது சடையாண்டி அரிவாளை எடுத்து ராமச்சந்திரனை சரமாரியாக வெட்டி சாய்த்துள்ளார். படுகாயமடைந்த ராமச்சந்திரனை மீட்டு அங்கிருந்தவர்கள் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்க முயற்சித்தனர். 

ஆனால், அவசர ஊர்திக்குள் ஏற்றுவதற்கு முன்னதாக ராமச்சந்திரன் துடிதுடித்து உயிரிழந்தார். இந்த விஷயம் தொடர்பாக காவல் துறையினருக்கு தகவல் தெரியவரவே, சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் ராமச்சந்திரனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து சடையாண்டியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.