ரூ.65 ஆயிரம் பணத்திற்கு கணக்கு சொல்ல முடியாமல், மனைவியின் கழுத்தை நெரித்து கொன்ற கணவன்; மதுரையில் அதிர்ச்சி.!

ரூ.65 ஆயிரம் பணத்திற்கு கணக்கு சொல்ல முடியாமல், மனைவியின் கழுத்தை நெரித்து கொன்ற கணவன்; மதுரையில் அதிர்ச்சி.!



Madurai Famous Singer Killed by Husband 


மதுரை மாவட்டத்தில் உள்ள மதிச்சியம் பகுதியை சேர்ந்த மேடைப்பாடகி கவிதா. இவர் தனது கணவரை பிரிந்து, 2 குழந்தைகளுடன் வசித்து வந்துள்ளார். 

இவருக்கு மேடை நிகழ்ச்சிகளில் மைக் செட் அமைத்துக்கொடுத்த நாகராஜன் என்பவருடன் அறிமுகம் ஏற்பட்டுள்ளது. அவரும் இரண்டு குழந்தைகளுடன் மனைவியாக பிரிந்து தனியாக வசித்து வந்தார். 

இவர்களின் குழந்தைகளை தனித்தனியே பெற்றோரின் பராமரிப்பில் விட்டுவிட்டு, திருமணம் செய்த காதல் ஜோடி பதினெட்டாங்குடி கிராமத்தில் வீடு எடுத்து தங்கி இருக்கிறது. 

தம்பதியிடையே அவ்வப்போது குடும்ப தகராறு ஏற்பட, கடந்த திங்கட்கிழமை கோவில் விழாவில் கலந்துகொள்ள கவிதா சொந்த கிராமத்தில் இருந்துள்ளார். அப்போது, நாகராஜன் மனைவியின் ஏ.டி.எம் வாங்கிச்சென்று ரூ.65 ஆயிரம் பணம் எடுத்துள்ளார். 

நிகழ்ச்சி முடிந்து வீட்டிற்கு வந்த கவிதா, பணம் எடுத்து குறித்து கேட்டுள்ளார். அதற்கு நாகராஜன் வேறொரு வீடு பார்த்துள்ளதாக கூறி இருக்கிறார். வீட்டிற்கு செல்ல மறுப்பு தெரிவித்த கவிதா, பணத்தை கேட்டபோது தகராறு ஏற்பட்டுள்ளது. 

ஆத்திரத்தில் கவிதாவின் கழுத்தை நாகராஜன் நெரித்து இருக்கிறார். அக்கம் பக்கத்தினர் அலறல் சத்தம் கேட்டு வர, மனைவிக்கு நெஞ்சு வலிப்பதாக கூறி நாகராஜன் பல்டி அடித்துள்ளார். 

அவசர ஊர்தி அதிகாரிகள் கவிதா உயிரிழப்பை உறுதி செய்தனர். அதிர்ந்துபோன நாகராஜன் மாரடைப்பு என ஊரார் முன் நாடகமாடி இருக்கிறார். உடற்கூராய்வில் கவிதாவின் கழுத்து எலும்பு உடைந்தது உறுதியானது. 

இதனையடுத்து, காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்படவே, அதிகாரிகள் தலைமறைவான நாகராஜனை கைது செய்து நடத்திய விசாரணையில் ரூ.65 ஆயிரம் பண விவகாரத்தில் நடந்த கொலை சம்பவம் அம்பலமானது.