காதல் தோல்வி.. தற்கொலை செய்து கொண்ட மகன்.. அதிர்ச்சியில் தாய் எடுத்து விபரீத முடிவு..!

காதல் தோல்வி.. தற்கொலை செய்து கொண்ட மகன்.. அதிர்ச்சியில் தாய் எடுத்து விபரீத முடிவு..!



Love failed.. Son committed suicide.. Shocked mother took tragic decision..!

சென்னை திருமுல்லைவாயில் காந்திபுரம் பகுதியை சேர்ந்தவர் பரமேஸ்வரி. இவர் துணிக்கடை ஒன்றில் வேலை செய்து வந்துள்ளார். மேலும் பரமேஸ்வரி தனது கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக மகன் லோகேஷூடன் தனியாக வசித்து வந்துள்ளார்.

இந்நிலையில் சம்பவத்தன்று வழக்கம்போல் பரமேஸ்வரி வேலைக்கு சென்றுள்ளார். அப்போது அவரது மகன் லோகேஷ் தனியாக வீட்டில் இருந்துள்ளார். பின்னர் வேலை முடிந்து பரமேஸ்வரி வீட்டிற்கு வந்து கதவை திறந்த போது மகன் லோகேஷ் தூக்கில் சடலமாக தொங்கிக்கொண்டு இருந்துள்ளார்.

love failure

இதனைக் கண்டு பரமேஸ்வரி அதிர்ச்சியடைந்து அலறி சத்தம் போடவே அருகில் இருந்தவர்கள் ஓடி வந்து பார்த்துள்ளனர். இதனையடுத்து அவர்கள் போலீசாருக்கும் தகவல் தெரிவித்துள்ளனர். இதற்கிடையில் மகன் இறந்த அதிர்ச்சியில் இருந்த பரமேஸ்வரி துக்கம் தாங்காமல் அவரும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதனையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் லோகேஷ் ஒரு பெண்ணை காதலித்து வந்துள்ளார். மேலும் அந்த பெண்ணுடன் ஏற்பட்ட காதல் தோல்வியால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது. இந்நிலையில் மகன் இறந்த துக்கம் தாங்காமல் தாயும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.