சொத்து பிரிப்பதில் தகராறு.. சிலிண்டரால் தந்தையை அடித்து கொன்ற மகன்!

சொத்து பிரிப்பதில் தகராறு.. சிலிண்டரால் தந்தையை அடித்து கொன்ற மகன்!



Land problem son killed father in Chennai

சென்னை கொளத்தூர் ராஜமங்கலம் பாபா நகர் பகுதியை சேர்ந்தவர் மதுசூதனன். கூலி தொழிலாளி இவருக்கு 2 மகன்களும், 2 மகன்களும் உள்ளனர். இதில், 2 மகன்களுக்கும் திருமணமாகிய நிலையில், ஒன்றாக வசித்து வந்துள்ளனர். இந்த நிலையில் தந்தை மதுசூதனனுக்கும், மகன் ஜார்ஜ் புஷ்க்கும் இடையே சொத்து பிரிப்பது தொடர்பாக தகராறு ஏற்பட்டுள்ளது.

Land problem

இந்த தகராறில் ஆத்திரம் அடைந்த ஜார்ஜ் புஷ் சமையலறையில் இருந்த சிலிண்டரை எடுத்து வந்து தந்தையை கொடூரமாக தாக்கியுள்ளார். இதில் பலத்த காயம் அடைந்த தந்தை மதுசூதனன் ரத்த வெள்ளத்தில் மயங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து வீட்டில் இருந்தவர்கள் ஜார்ஜ் புஷ்ஷை தாக்கியுள்ளனர்.

Land problem

இதனையடுத்து பலத்த காயமடைந்த ஜார்ஜ் புஷ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். எந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் மதுசூதனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.