நயன் ரசிகர்களுக்கு டபுள் சர்ப்ரைஸ்.. GQ விருது விழாவில் சிறப்பு.!
மூளை சிதறி பலியான காதல் மனைவி.. கொடூரமாக வெட்டிக்கொன்ற கணவன்.. கன்னியாகுமரியில் நெஞ்சை பதறவைக்கும் சம்பவம்.!
மூளை சிதறி பலியான காதல் மனைவி.. கொடூரமாக வெட்டிக்கொன்ற கணவன்.. கன்னியாகுமரியில் நெஞ்சை பதறவைக்கும் சம்பவம்.!
மனைவி அழகுக்கலை படிக்க சென்று வந்ததால் சந்தேகம் கொண்ட கணவர், காதல் மனைவியை வெட்டி கொலை செய்த பயங்கரம் நடந்துள்ளது. மனைவியின் மீது வைத்திருந்த அன்பு, காதல் வன்மமாக மாறி நடந்த சோகம் குறித்து விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தக்கலை, அழகியமண்டபம் கிராமத்தை சேர்ந்தவர் எபனேசர் (வயது 35). இவர் டெம்போ ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். இவரின் மனைவி ஜெப பிரின்சா (வயது 31). தம்பதிகளுக்கு ஜெபநேசன் (வயது 14), ஜெப ஆகாஷ் (வயது 13) என்ற மகன்கள் இருக்கின்றனர்.
கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு இருவரும் ஒருவரையொருவர் உயிருக்கு உயிராக காதலித்து வந்த நிலையில், இருவரும் வெவ்வேறு சமூகத்தை சார்ந்தவர்களாக இருந்தாலும் குடும்பத்தை எதிர்த்து திருமணம் செய்துகொண்டனர். பின்னாட்களில் இருவரின் குடும்பத்தினருக்கும் தம்பதிகளை ஏற்றுக்கொண்டனர்.
ஜெப பிரின்சாவின் தந்தை ஜெபசிங்கின் சொந்த ஊர் மூலச்சல் பன்றி வெட்டான் பாறைவிளை ஆகும். அங்கு எபனேசர் தனது மனைவி, குழந்தைகளுடன் வசித்து வந்துள்ளார். இவர்களின் வீடு ஒருகட்டத்தில் வலுவிழந்து வந்ததால், எபனேசர் புதிய வீடு கட்டும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். அப்போது, ஜெப பிரின்ஷா தனது தந்தையின் வீட்டில் குழந்தைகளோடு தங்கி இருந்துள்ளார்.
இதற்கிடையில், கடந்த 3 மாதங்களுக்கு முன்னதாக பிரின்ஷா திருவனந்தபுரத்தில் இருக்கும் அழகு நிலையத்தில் பியூட்டீஷியன் படிக்க சேர்ந்ததால், தினமும் பேருந்தில் அங்கு சென்று வந்துள்ளார். திருவனந்தபுரம் சென்றுவரும் சமயத்தில் அவரின் உடை, நடை, பாவனைகளில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக எபனேசர் கருத்தியுள்ளார். இதுதொடர்பாக இருவருக்கும் சண்டை நடந்துள்ளது.
இதனால் நீ படிக்க செல்ல கூடாது என எபனேசர் மனைவி ஜெப பிரின்ஷாவை கண்டிக்கவே, கணவரின் பேச்சை கண்டுகொள்ளாமல் மனைவி படிக்க சென்றுள்ளார். இவ்வாறாக எபனேசர் தனது மனைவியின் மீது வைத்திருந்த காதலை மறந்து வெறுப்பை அதிகரித்துள்ளார். இது அவரை மனைவியை கொலை செய்திடலாம் என்ற எண்ணத்திற்கு அழைத்திரு சென்றுள்ளது.
நேற்று முனத்தினத்தில் ஜெப பிரின்ஷாவின் தம்பி ஜெப பிரின்ஸுக்கு திருமணம் தொடர்பான பேச்சுவார்த்தை நடந்து, துணி எடுக்க கடைக்கு சென்று இரவில் வீட்டிற்கு வந்துள்ளனர். நிகழ்ச்சியில் ஜெப பிரின்ஷா கூடுதல் மேக்கப்போடு உடை அணிந்து இருக்கிறார். உறவினர்களுடன் இயல்பாக பேசியுள்ளார். இது எபனேசருக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
இதனையடுத்து, தனது மனைவியை கொலை செய்து தானும் தற்கொலை செய்ய முடிவெடுத்து, அரிவாள் மற்றும் விஷம் போன்றவற்றை முன்னதாகவே வீட்டில் வாங்கி வைத்துள்ளார். சம்பவத்தன்று இரவு தம்பதிகளுக்குள் சண்டை நடக்க, அதனை மாமனார் ஜெபசிங் தட்டிக்கேட்டுள்ளார். இது இருவருக்கும் இடையே வாக்குவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
எபனேசர் உங்கள் வீட்டில் இருப்பதால் தரக்குறைவாக பேசுகிறீர்களா? என்று கேள்வி எழுப்பியதோடு மனைவி, குழந்தையை அழைத்துக்கொண்டு வீட்டிற்கு செல்கிறேன் என புறப்பட்டுள்ளார். இரவு நேரம் என்பதால் குடும்பத்தினர் சமாதானம் செய்து நாளை செல்லலாம் என சமாதானப்படுத்தியுள்ளனர்.
அப்போது, இரவு 11 மணியளவில் கணவர் அழைத்தார் என மனைவி தனியாக பேசுவதற்கு செல்ல, முன்னேற்பாடு திட்டத்துடன் இருந்த எபனேசர் மனைவி ஜெப பிரின்ஷாவை மருதவிளை பகுதிக்கு அழைத்து சென்று தலை, கழுத்து பகுதியில் சரமாரியாக வெட்டி கொலை செய்துள்ளார். சம்பவத்தில் ஜெப பிரின்ஷாவின் மூளை சிதறி விழுந்து துடிதுடித்து உயிரிழந்துள்ளார்.
மனைவியை தீர்த்துக்கட்டிய எபனேசர், அருகே இருந்த தோட்டத்திற்கு சென்று விஷம் குடித்து தற்கொலைக்கு முயற்சித்துள்ளார். பின்னர், உறவினர்களுக்கு தொடர்பு கொண்டு தகவலை தெரிவித்துள்ளார். இதனைக்கேட்டு அதிர்ந்துபோன குடும்பத்தினர் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் ஜெப பிரின்ஷாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். எபனேசர் உயிருக்கு போராடியதால் சிகிச்சைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.