நாயின் உயிரைக்காப்பாற்ற நினைத்து தாயின் உயிரை இழந்த பரிதாபம்.. சடன் பிரேக் அடித்ததால் சோகம்..!!



Kanchipuram School Teacher Died

காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத்தை சேர்ந்தவர் ராதா. இவர் பள்ளி ஆசிரியையாக பணிபுரிந்து வரும் நிலையில், தனது மக்களை அழைப்பதற்காக நாமக்கல் மாவட்டத்தில் உள்ள முதலைப்பட்டி அருகே தேசிய நெடுஞ்சாலையில் காரில் சென்றுள்ளார். 

அப்போது நாய் குறுக்கே வந்ததால், அதன் மீது மோதிவிடக்கூடாது என்பதற்காக திடீரென பிரேக் போட்டதில் நிலைதடுமாறி கார் கவிழ்ந்துள்ளது. இதில் சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

காஞ்சிபுரம் மாவட்டம்

பின் இந்த சம்பவம் தொடர்பாக அருகிலிருந்தவர்கள் காவல்துறையினரிடம் தகவல் தெரிவிக்கவே, சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் ஆசிரியர் ராதாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.