சிறுமி மித்ராவின் கண்ணீர் உங்களைச் சும்மா விடாது.! கொந்தளித்த கமல்ஹாசன்.!

சிறுமி மித்ராவின் கண்ணீர் உங்களைச் சும்மா விடாது.! கொந்தளித்த கமல்ஹாசன்.!


kamalhasan-talk-about-farmer-death

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகேயுள்ள பிள்ளையார்நத்தம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி நாராயணசாமி என்பவர் அவரது பயிர்கள் சேதமானதால் மிகவும் மனவருத்தத்தில் இருந்துள்ளார். மேலும், கடன்சுமை அதிகமானதால் அவரது விவசாய நிலத்திற்கு அருகே உள்ள மரத்தில் கடந்த சனிக்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டடார்.

மேலும், அவர் தனது தற்கொலை தொடர்பாக தனது பேத்தி மித்ராவிடம் மன்னிப்புக் கேட்டு சுவற்றில் வாசகத்தினை எழுதி வைத்திருந்தார் விவசாயி நாராயணசாமி. இந்த நிலையில் சிறுமி மித்ராவின் கண்ணீர் உங்களைச் சும்மா விடாது என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் ஆவேசமாக கருத்து தெரிவித்துள்ளார்.


இதுதொடர்பாக கமல்ஹாசன் நேற்று அவரது ட்விட்டர் பக்கத்தில், "பிள்ளையார்நத்தம் விவசாயி நாராயணசாமியின் தற்கொலை உளம் நடுங்கச்செய்கிறது. காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை இந்திய விவசாயிகளின் நிலைமை இதுதான். சாகடிக்கப்படுவதை தற்கொலை என்றா சொல்வது? எனக்கு சாபத்தில் நம்பிக்கை இல்லை ஆனால், கோபத்தில் நம்பிக்கை உண்டு. சிறுமி மித்ராவின் கண்ணீர் உங்களைச் சும்மா விடாது" என்று பதிவிட்டுள்ளார்.