ஒன்றரை வயது குழந்தைக்கு சளி மருந்து வாங்கி கொடுத்த பெற்றோர்! அதிகாலை 4 மணிக்கு குழந்தைக்கு நடந்த அதிர்ச்சி சம்பவம்! துடிதுடித்து போன பெற்றோர்!

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே வசிக்கும் சின்னபாண்டி மற்றும் பானுப்பிரியா தம்பதிகள். கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இவர்களது திருமண வாழ்க்கையைத் தொடங்கினர். சின்னபாண்டி ஒரு டேங்கர் லாரி டிரைவர் ஆக பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு பிரணித் என்ற ஒரு ஒன்றரை வயது மகன் உள்ளார்.
ஜூன் 26ஆம் தேதி, குழந்தைக்கு சளி பிரச்சனை வந்தது. அதனை சமாளிக்க பெற்றோர் அருகிலுள்ள கடையில் இருந்து சளி மருந்து வாங்கி வழங்கினர். குழந்தை தூங்கியதும், அதிகாலை 4 மணிக்கு, kulanthaiyinb உடல்நிலை மிகவும் மோசமாகியது.
உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனின்றி, சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான்.
காவல்துறை நடவடிக்கை
இந்த தகவலை அறிந்த காவல்துறை அதிகாரிகள், சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணையை தொடங்கியுள்ளனர். மருந்தின் தன்மை மற்றும் அளவுக்கு தொடர்பான விசாரணைகளும் மேற்கொள்ளப்படுகின்றன.
இதையும் படிங்க: காதல் திருமணம்! வரதட்சணையாக சொந்த வீடு! கணவனுக்கு வேலை இல்லை! திடீரென பெண் செய்த அதிர்ச்சி செயல்! குமரியில் பரபரப்பு...