16 வயது சிறுமிக்கு திருமண ஆசைகாட்டி பலாத்காரம்.. 55 வயது சித்தப்பா ஷாக் செயல்.!
பேரப்பிள்ளைகள் இருக்க 16 வயது சிறுமிக்கு திருமண ஆசை காண்பித்து பாலியல் வன்கொடுமை செய்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
16 வயது சிறுமி:
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பொன்னேரியைச் சேர்ந்தவர் சங்கர் (வயது 55). இவரின் உறவினர் மகளுக்கு 16 வயது ஆகிறது. சிறுமி பெற்றோருடன் வசித்து வந்த நிலையில், சிறுமிக்கு சங்கர் சித்தப்பா முறை ஆவார்.
இதையும் படிங்க: 15 வயது சிறுமிக்கு திருமண ஆசை காண்பித்து ஓட்டுநர் செய்த கொடுமை.. சங்கரன்கோவிலில் பதறவைக்கும் சம்பவம்.!
திருமணம்:
சங்கருக்கு திருமணம் முடிந்து மனைவி, குழந்தைகள், பேரப்பிள்ளைகள் இருக்கின்றனர். இதனிடையே, சங்கர் தனது உறவினர் மகளான 16 வயது சிறுமியை கோவில் ஒன்றில் வைத்து திருமணம் செய்து இருக்கிறார்.
பலாத்காரம்:
பின் அரிசி ஆலையில் தங்கி இருந்தபடி வேலை பார்த்ததாக கூறப்படும் நிலையில், சிறுமியை பாலியல் வன்கொடுமையும் செய்துள்ளார். இந்த விஷயம் குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் விசாரணை நடத்தியுள்ளனர்.
விசாரணையில் உண்மை அம்பலமாகவே, சங்கரை அதிகாரிகள் போக்ஸோவில் கைது செய்தனர்.
இதையும் படிங்க: +2 மாணவி பாலியல் வன்கொடுமை.. காதலித்து திருணம் செய்வதாக அரங்கேறிய கொடுமை.!