#Breaking: 15 வயது சிறுமி கூட்டுப்பாலியல் துன்புறுத்தல்.. கழுத்தறுத்து கொலை முயற்சி.. கரூரில் பயங்கரம்.!

பரிசு கொடுப்பதாக மாணவியை அழைத்துச் சென்று கூட்டுப்பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்திஉள்ளது.
கரூர் மாவட்டத்தில் உள்ள குளித்தலை, கிருஷ்ணாபுரம், அண்ணாவி பூசாரிப்பட்டி பகுதியில், 15 வயதுடைய சிறுமி ஒருவர் வசித்து வருகிறார். இவர் விவசாயியின் மகள் ஆவார். சிறுமி அங்குள்ள தரங்கம்பட்டி மாதிரி மேல்நிலைப்பள்ளியில் 10 ம் வகுப்பு பயின்று வருகிறார்.
இதையும் படிங்க: நிலப்பிரச்சனையில் இப்படியா? தகர கொட்டகைக்குள் பாய்ந்த கார்? திமுக பெண் நிர்வாகி மீது புகார்.!
நேற்று விடுமுறை தினத்தில் வீட்டில் இருந்த சிறுமிக்கு, அவருடன் நட்பாக பழகி வந்த 12 ம் வகுப்பு மாணவர் செல்போனில் தொடர்புகொண்டு அழைத்துள்ளார். மாணவிக்கு பரிசு வாங்கி வைத்துள்ளதாகவும், அதனை கொடுக்க வேண்டும் என வற்புறுத்தி அழைத்துள்ளார்.
கூட்டுப்பாலியல் பலாத்காரம்
அதனை நம்பிச் சென்ற சிறுமியை 12 ம் வகுப்பு மாணவர், அவருடன் இருந்தவர்கள் சேர்ந்து கூட்டுப்பாலியல் வன்கொடுமை செய்ய முற்பட்டுள்ளனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அலறிய சிறுமியை கத்தியால் சரமாரியாக தாக்கி இருக்கின்றனர். மேலும், கழுத்தை அறுத்துள்ளனர்.
அபயக்குரல் கேட்டு வந்த உள்ளூர் மக்கள், சிறுமியை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், பாலவிடுதி காவல்துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர். தற்போது 12 ம் வகுப்பு மாணவனை கைது செய்துள்ள அதிகாரிகள், தலைமறைவான 2 பேருக்கு வலைவீசி இருக்கின்றனர்.
இதையும் படிங்க: மக்களை விரட்டி-விரட்டி தாக்கிய வடமாநில இளைஞர்கள்; பல்லடத்தில் பயங்கரம்.!