"ஜனநாயகன் ரிலீஸில் பழைய ரசிகராக இருக்க விஜய் அனுமதி.?!" அமைச்சர் விக்னேஷ் பேட்டி.!
நண்பருடன் பேசிய பெண்ணை தனியே அழைத்துச்சென்று பாலியல் அத்துமீறல்.. காவலர் கைது.. கோவையில் ஷாக்.!
ஆண் நண்பருடன் பேசிக்கொண்டு இருந்த பெண்ணுக்கு காவலர் பாலியல் தொல்லை கொடுத்தார்.
நண்பருடன் பேசினார்:
கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள துடியலூர் காவல் எல்லைக்குட்பட்ட வெள்ளக்கிணறு வீட்டுவசதி வாரிய குடியிருப்பு பகுதியில், கடந்த 15ம் தேதி மாலை 6 மணியளவில் இளம்பெண் தனது ஆண் நண்பருடன் பேசிக்கொண்டு இருந்தார்.
இதையும் படிங்க: கடன் கேட்டு வந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை.. பாஜக பிரமுகரின் கொடூர செயல்..!
காவலர்:
அப்போது, அங்கு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு கொண்டு இருந்த துடியலூர் காவல் நிலைய இரண்டாம் நிலைக்கவளர் வினோத் குமார் (வயது 32), இருவரிடமும் விசாரணை செய்துள்ளார். பின் பெண்ணை தனியாக அழைத்துச் சென்று விசாரிப்பதாக கூறி பாலியல் ரீதியாக அத்துமீறி துன்புறுத்தி இருக்கிறார்.
புகார்:
இந்த விஷயம் குறித்து பெண் தனது ஆண் நண்பரிடம் தெரிவிக்கவே, இருவரும் சென்று காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த புகாரின் பேரில் அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி காவல் அதிகாரி வினோத் குமாரை கைது செய்தனர்.
இதையும் படிங்க: மனநலம் பாதிக்கப்பட்ட இளம்பெண் கர்ப்பம்.. தவெக நிர்வாகி கைது.. நாமக்கல்லில் ஷாக்.!