ஓ.பி.எஸ் அணி நிர்வாகிக்கு போனில் ஆபாச அர்ச்சனை; உட்கட்சி பிரச்சனையில் இரவுகளில் தொடரும் அவலம்.. புலம்பும் புள்ளி.!



in-chennai-perambur-o-panneer-selvam-party-supporter

 

சென்னையில் உள்ள பெரம்பூர், பெரவள்ளூர் லட்சுமணன் நகர் பகுதியில் வசித்து வருபவர் கிருஷ்ணமூர்த்தி (வயது 50). இவர் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தின் அதிமுக ஓ.பி.எஸ் அணி வடசென்னை மத்திய மாவட்ட செயலாளராக பொறுப்பு வகித்து வருகிறார். 

இக்கட்சியில் ராயபுரம் சட்டப்பேரவை தொகுதியின் பகுதி செயலாளராக அறிவழகன் என்பவர் கிருஷ்ணமூர்த்தியால் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதனிடையே, கிருஷ்ணமூர்த்தி தொடர்பாக அறிவழகன் கட்சியினரிடம் அவதூறு தெரிவித்து வந்துள்ளார். 

இதையும் படிங்க: சென்னை: 60 வயது மூதாட்டி பலாத்கார முயற்சி; 22 வயது ரௌடி கைது.!

chennai

போனில் தொடர்புகொண்டு அவதூறு

இந்த தகவல் கிருஷ்ணமூர்த்தியின் கவனத்திற்கு செல்லவே, அவர் அறிவழகனை பொறுப்பில் இருந்து விடுவித்து உத்தரவிட்டு இருக்கிறார். இதனால் ஆத்திரமடைந்த அறிவழகன், இரவு நேரத்தில் கிருஷ்ணமூர்த்திக்கு தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.

இரவு நேரத்தில் கிருஷ்ணமூர்த்திக்கு தொடர்பு கொண்டு பேசும் அறிவழகன் தகாத வார்த்தை பேசி திட்டி, சமூக வலைத்தளத்திலும் அவதூறு பரப்பும் செயலில் இறங்கி இருக்கிறார். 

இந்த விஷயம் குறித்து திரு வி.க நகர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்படவே, அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: சென்னை மக்களே ரெடியா? நாளை இந்த பகுதிகளில் மின்தடை..!